சென்னை:கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன்கோவில் அருகே, அக்., 23ம் தேதி, கார்குண்டு வெடித்து ஜமேஷாமுபின், 28, என்பவர் பலியானார்.
இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை, என்.ஐ.ஏ., போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பந்தமாக, பலரை, போலீசார் கைது செய்தனர்.
இதில் ஏழு பேரை, போலீஸ் காவலில் விசாரிக்க, பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., போலீசார், நேற்று மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி இளவழகன் முன், முகமது அசாரூதீன், 23, பைரோஸ், 28, நவாஸ், 26, அப்சர்கான், 28, முகமது தவ்பீக், 25, சேக் இதயதுல்லா, 42, மற்றும் சனோபர் அலி, 28, ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரித்த நீதிபதி, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் அவர்களிடம் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.