கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Added : பிப் 02, 2023 | |
Advertisement
நாகப்பட்டினம்:கோடியக்கரை அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45. இவருக்கு சொந்தமான 'பைபர்' படகில், பன்னீர்செல்வம் உட்பட ஐந்து மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக கரைக்கு திரும்பினர்.
 கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

நாகப்பட்டினம்:கோடியக்கரை அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45. இவருக்கு சொந்தமான 'பைபர்' படகில், பன்னீர்செல்வம் உட்பட ஐந்து மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக கரைக்கு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை அருகே ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.

படகை பிடித்துக் கொண்டு ஐந்து மீனவர்களும் தத்தளித்தனர். அவ்வழியே சென்ற வேறு பகுதி மீனவர்கள், தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி, கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு விரைந்து சென்ற மணியன் தீவு மீனவர்கள், கடலில் கவிழ்ந்த படகு மற்றும் மீனவர்களை மீட்டு நேற்று கரைக்கு அழைத்து வந்தனர்.

சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X