பட்ஜெட் 2023

POWERED BY

'பான்' எனும் நிரந்தர கணக்கு எண் இனி பொது வணிக அடையாளம் ஆகிறது

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
''குறிப்பிட்ட அரசு அமைப்புகளின், 'டிஜிட்டல்' முறைகளுக்கு, 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண் இனி பொது வணிக அடையாளமாக பயன்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.நாட்டில் உள்ள தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. எண்களும், ஆங்கில எழுத்துக்களும் உடைய 10
பான், நிரந்தர கணக்கு, எண், பொது வணிக அடையாளம்

''குறிப்பிட்ட அரசு அமைப்புகளின், 'டிஜிட்டல்' முறைகளுக்கு, 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண் இனி பொது வணிக அடையாளமாக பயன்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


நாட்டில் உள்ள தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. எண்களும், ஆங்கில எழுத்துக்களும் உடைய 10 இலக்கமே நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது.


இந்நிலையில், பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:


latest tamil news


மத்திய அரசின் குறிப்பிட்ட துறைகளின், 'டிஜிட்டல்' அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக நிரந்தர கணக்கு எண் இனி பயன்படுத்தப்படும். இது எளிதான வணிக நடவடிக்கைக்கு சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படும்.


இதற்காக, ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு முறைகளின் அமைப்பு உருவாக்கப்படும்.


இதன் வாயிலாக, பொதுவான இணையதளம் மூலம், வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, தகவல்கள் பிற அரசு நிறுவனங்களுடன் பகிரப்படும். இதேபோல் ஆதார் மற்றும் 'டிஜி லாக்கர்' பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


'டிஜி லாக்கர்' என்பது, மத்திய அரசின்,'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும். மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும் அமைப்புகளிடம் இருந்து, இவற்றை பெற்று, டிஜிட்டல் வடிவில் வழங்கும் பணியை டிஜி லாக்கர் அளிக்கிறது.


எதிர்காலத்தில், ஆவணங்களின் நேரடி பயன்பாட்டை நீக்கவே இந்த தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202306:39:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒன்றைக்காட்டிலும் அதிக பான்கார்டுகள் இல்லாத குஜராத்தியே இல்லை எனலாம். ஆகவே, தேர்தல் வாக்கு அடையாளமாக பான்கார்டை உபயோகிக்கலாம்ன்னு அடுத்த சட்டம் ஒன்றை சைக்கிள் கேப்பில் விடுவார்கள்.
Rate this:
Cancel
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
02-பிப்-202304:29:36 IST Report Abuse
Ramasamy எத்தனை அடையாள அட்டை கொண்டு வந்தாலும், ஆதார் அட்டை கேட்டு தான் தொந்தரவு செய்கிறார்கள். அதிலும் இந்த வங்கி அதிகாரிகளின் அடாவடி தாங்கவில்லை. ஆதார் அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு போட்டும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதை ஏற்றுக் கொண்டு விட்ட பிறகும் ஆதாரை கேட்பது சட்ட விரோதம். இலவச திட்டங்களுக்கு மட்டுமே ஆதார். மற்றவைகளுக்கு தேவையில்லை.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
02-பிப்-202306:49:03 IST Report Abuse
Fastrackஅமெரிக்காவில் சோஷியல் செக்கூரிட்டி கார்டு இல்லாம எதுவும் செய்ய முடியாது . ஆஸ்திரேலியாவில் பாஸ் போர்ட் இல்லாம உங்களால் ஒன்றும் செய்ய முடியாது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X