அரசியல் பண்பாளராக உலா வரும் அண்ணாமலை!

Added : பிப் 02, 2023 | கருத்துகள் (118) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:கே.ராமன், சிவகங்கையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கல்வியில் சிறந்தவர்களை கற்றோர்பலரும் விரும்புவர். அதேபோல, அரசியலில் பண்பு காத்து வரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்.,'பாஸ்' செய்து, காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் என்பதை பலரும் அறிவர்.ஆனால், அவர் சிறந்த
Annamalai, BJP, அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:


கே.ராமன், சிவகங்கையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கல்வியில் சிறந்தவர்களை கற்றோர்பலரும் விரும்புவர். அதேபோல, அரசியலில் பண்பு காத்து வரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்.,'பாஸ்' செய்து, காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் என்பதை பலரும் அறிவர்.


ஆனால், அவர் சிறந்த தொழிற்கல்வி பட்டதாரி என்பதும், கோவையில் இயங்கும் புகழ் பெற்ற கல்லுாரியில், 2002 முதல், 2007 வரை, 'சேண்ட்விச் மெக்கானிக்கல் ஜெனோகிரெட்ஸ்' என்ற, தொழில்நுட்ப கல்வி பயின்று தேறியவர் என்பதை அறியும் போது, அவர் மீதான மதிப்பு அதிகரிக்கிறது. அவரிடம் எளிமையும், அடக்கமும் மேலோங்கி காணப்படுகிறது.


latest tamil news

தன் தாய், தந்தையை மதித்து வாழும் அதே பண்புடன், கல்லுாரியில் தனக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள் மற்றும் முதல்வரையும்,அவர் பெருமையாக பேசுவது சிறப்பு. அத்துடன், தன் மனைவி பற்றியும், அவர் பெருமையாக பேசி வருவது, அனைவரையும் மனம் நெகிழச் செய்கிறது. அரசியல் என்றால் வேறு அர்த்தம் கொண்டு இருந்தவர்கள், தற்போது, அண்ணாமலையை பெருமையுடன் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் உருவாகியுள்ளது.


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர், 'அனைத்து மக்களும் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்' என்றார். தற்போது அவர் இருந்திருந்தால், 'அனைத்து மாணவர்களும் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்' என்று கூறியிருப்பார்.


'தாய்க்கு பின் தாரம்' என, முன்னோர் குறிப்பிட்டு உள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், தன் வெற்றிக்கு பின்னால், தன் மனைவி இருக்கிறார் என்ற உண்மையை, அண்ணாமலை உலகறியச் செய்துள்ளார். 'இனி, இவர் தான் நம்மவர்' என, எல்லாரும் விரும்பும் அரசியல் பண்பாளராக உலா வரும் அண்ணாமலையின் அரசியல் பணி சிறக்க, ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (118)

baala - coimbatore,இந்தியா
08-பிப்-202310:22:02 IST Report Abuse
baala arasiyalil panbu irukkirathaa? சாக்கடை யை விட மேலாக உள்ளது. அரசியல் பண்பை எதிர்பார்ப்பது, பண்பு இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது எவ்வளவு மோசம்
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
08-பிப்-202310:18:48 IST Report Abuse
baala படித்தால் தான் அறிவாளியா? படிக்காமல் எதனை பேர் பண்புள்ளவர்களாக, அறிவுள்ளவர்களாக இல்லையா? இந்த நடுநிலை பத்திரிகை இது போன்ற செய்திகளை தவறாமல் பிரசுரிக்கும். நாட்டு மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்பதை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். மக்களுக்கு ஸ்ரீத பலன்களை கொஞ்சம் எழுதவும். இப்போதுள்ள படிப்பை பற்றி எல்லோருமே அறிவர். அந்த கால மூன்றாம் வகுப்புக்கு சமம் இப்போதுள்ள பட்டம் எல்லாம்,.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-பிப்-202313:10:47 IST Report Abuse
Matt P நீங்க சொல்கிற எல்லா பண்புகளும் ஸ்தாலினிடமும் தான் இருக்கிறது. அம்மாவை அப்பாவை ஆசிரியர்களை மனைவியை மக்களை (அவர் பிள்ளைகளை) நேசிப்பதில் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. அப்பா பயன்படுத்திய பேனாவுக்கே அரசு செலவில் வைக்கிறார்னா பாத்துக்கோங்க ...எப்படிப்பட்ட பாசக்கார மகன் என்று .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X