'மீட்கப்பட்ட சிலைகளை கோவில்களில் வைக்கணும்!': பொன் மாணிக்க வேல்

Added : பிப் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
திருப்பத்துார்: ''கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை, அந்தந்த கோவில்களிலேயே மீண்டும் வைத்து வழிபட வேண்டும்,'' என, முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் கூறினார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று, உலக சிவனடியார்கள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில்,
Tirupattur, kovil Statue, Pon Manickavel, சிலை,கோவில், பொன் மாணிக்கவேல், திருப்பத்தூர், கோவில் சிலை, தமிழகம், Statue, kovil, Tamil Nadu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பத்துார்: ''கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை, அந்தந்த கோவில்களிலேயே மீண்டும் வைத்து வழிபட வேண்டும்,'' என, முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று, உலக சிவனடியார்கள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், சிலைகளை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு அறைகள் கட்ட, தமிழக அரசு, 340 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஆனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பாதுகாப்பு அறைகள் இன்னமும் கட்டப்படவில்லை. ஒரே ஒரு கோவிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.


latest tamil news

தமிழகம் முழுதும் உள்ள பழமையான கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளன. அதன் விபரங்களை, அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில்களிலிருந்து கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளை, மீண்டும் அந்தந்த கோவில்களிலேயே வைக்க வேண்டும்; பக்தர்கள் வழிபடச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-202316:25:43 IST Report Abuse
J.V. Iyer ஹிந்துக்களுக்கு புத்தி புகட்டுங்கள். பாஜக ஆட்சி வந்தால்தான் ஹிந்துக்களுக்கு வாழ்வு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-202316:19:01 IST Report Abuse
Kasimani Baskaran அனைத்து திராவிடர்களும் இந்து மத விரோதிகளே. நடிப்பதில் சிலர் இயற்கையாக நடிப்பார்கள், ஒரு சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் நடிப்பார்கள். இந்துக்கள் இந்த கோஷ்டியை மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் நமது கண் முன்னேயே கோவில்கள் கொள்ளையடிக்கப்படும், சொத்துக்கள் சூரையாடப்படும். முடிந்தால் ஒவ்வொரு இந்துவும் இந்து அறநிலையத்துறை சட்டத்தை ஆழமாக படிக்க வேண்டும். விதிமீறல்களை / அட்டகாசங்களை நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளாக தொடர தயங்கவே கூடாது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
02-பிப்-202313:24:17 IST Report Abuse
sridhar இவர் பிஜேபி கட்சியில் இருக்க வேண்டியவர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X