பட்ஜெட் 2023

POWERED BY

இரண்டு விதமான வருமான வரி முறைகள்: வருமான வரி எப்படி?

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
பழைய, புதிய என இரண்டு வித வருமான வரி முறைகள் உள்ளன. பழைய வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை. இதன்படி2020ல் அறிமுகமான புதிய வருமான வரி முறையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வு செய்தால் வரிக்கழிவு கிடையாது. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை (முன்பு ரூ.5 லட்சமாக இருந்தது) வரி இல்லை. அதற்கு மேல் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.இதன்படி ஒருவர் ஆண்டுக்கு ரூ.9
Union Budget 2023, budget, budget 2023, பட்ஜெட்

பழைய, புதிய என இரண்டு வித வருமான வரி முறைகள் உள்ளன. பழைய வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை. இதன்படி


latest tamil news


2020ல் அறிமுகமான புதிய வருமான வரி முறையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வு செய்தால் வரிக்கழிவு கிடையாது. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை (முன்பு ரூ.5 லட்சமாக இருந்தது) வரி இல்லை. அதற்கு மேல் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.


latest tamil news



இதன்படி ஒருவர் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பாதித்தால், முதல் ரூ.3 லட்சத்துக்கு வரி இல்லை. மீதி 6 லட்சத்துக்கு ரூ.45,000 வரி செலுத்தினால் போதும்.


வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி கிடையாது இனி



சம்பளதாரர்கள் மிகவும் எதிர்பார்த்த வருமான வரிச் சலுகை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டு வருமான வரி விலக்கு, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, புதிய வரி முறையே இனி இயல்பான வரி முறையாக இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் பழைய வரி முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

2020ல், வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஏற்கனவே உள்ள வரி விதிப்பு நடைமுறை, பழைய வரி முறை என்றும்; ஆறு அடுக்குகளுடன் கூடியது, புதிய வரி விதிப்பு முறை என்றும் அறிவிக்கப்பட்டது.

பழைய வரி விதிப்பு முறையில் வருமான வரிச் சலுகைகள் உண்டு. ஆனால், புதிய வரி விதிப்பு முறையில், குறிப்பிட்ட சில வருமான வரிச் சலுகை
களை பெற முடியாது. அதே நேரத்தில் பழைய முறையை விட புதிய முறையில் வரி விதிப்பு சதவீதம் குறைவு. தற்போது, வருமான வரி குறித்து ஐந்து முக்கிய அறிவிப்புகள், 2023 - 24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள்:

1. புதிய வருமான வரி முறையின் கீழ், ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை. இந்த வரிச் சலுகை, வரும் நிதியாண்டில் 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் பழைய வருவாய் முறையை தொடர்வோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் வரிச் சலுகை கிடைக்கும்.

2. புதிய வருவாய் முறையில் வரி அடுக்குகள் ஆறில் இருந்து ஐந்தாக மாற்றப்பட்டுள்ளன; வரி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வருவாய் சலுகை, 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி ஏதும் கிடையாது. இதனால், அதிக பலன் மக்களுக்கு கிடைக்கும். உதாரணத்துக்கு, 9 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர், இதற்கு முன், 60 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தினார். இனி, 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரியாக செலுத்த நேரிடும்.

3. ஆண்டு வருமானம், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, 52 ஆயிரத்து 500 ரூபாய் நிரந்தர கழிவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

4. இதுவரை வருமான வரியில் அதிகபட்சமாக இருந்த வரி விகிதம், 42.74 சதவீதத்தில் இருந்து, 39 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

5. பணியில் இருந்து ஓய்வு பெறும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், விடுப்பு ஈட்டுத் தொகைக்கான வரிச் சலுகை உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயாக இருந்து. 2002ல் கடைசியாக இதில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது அரசு பணியில் அதிகபட்ச அடிப்படை சம்பளம், 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது சம்பளம் உயர்ந்துள்ளதால், இந்த விடுப்பு ஈட்டுத் தொகைக்கான வரிச் சலுகை உச்ச வரம்பு, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

M Ramachandran - Chennai,இந்தியா
02-பிப்-202320:16:49 IST Report Abuse
M  Ramachandran முதியோர்க்கள் மறக்கடிக்கப்படுகிறார்கள் அவர்கள் வேண்டா விருந்தாளி.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-பிப்-202319:52:20 IST Report Abuse
M  Ramachandran மக்களெ வெளிநாடுகளில் 33% கண்டிப்பாக வரி செலுத்தியாகா வேண்டும் .எந்த வித சலுகையும் கிடையாது நம் நாட்டடில் வரி விதிப்பு முறை எவ்வளவோ மேல். தற்போனது நாம் பல முன்னேஆரிய நாடுகலிய்ய விட மேலாக யிருக்கிறோம் இங்கிலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நம் நாட்டு பணத்திற்கு 195 லிருந்து 200. வரை தினமும் மாற்றமிருக்கும். அது மாட்டு மல்ல ரயில் பயணம் மிக அதிகம். பொருட்கள் விலை வாசியும் யேரிய வண்ணம் இருக்கிறது சம்பள உயர்வு கேட்டு பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. NHS strike ரயில் ஊழியர்கள் போஸ்ட்டாபீஸ் ஊழியர்கள் ஏன்று. அரசு திணறி கொண்டிருக்கிறது. தற்சமயம் எந்த நிறுவனமும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதில்லை. அவர்கள் தற்சமயம் வாங்கும் சம்பளம் விளையய வாசி உயர்வால் 2000 வைத்து சம்பளத்துக்கு இணையாக இறங்கி விட்டத்தாக வேலைய்ய நிறுத்தத்தில் ஈடு படுகிறார்கள்.இந்த கடினமான நேரத்தில் நம் மத்திய அரசு திறமையாகவும் சிறப்பாகவும் கையாண்டு கொண்டிருக்கிறது .
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-பிப்-202319:01:38 IST Report Abuse
sankaranarayanan வரி...... வரி...... வரி...... உடம்பில் வரிகளே கிடையாதே வார்த்தைகளால் ஆனதுதான் வரி. பிறகு வரிகளே இல்லாமல் வார்த்தைகளால் அரசு நாட்டை ஆளமுடியாதா? இதுவும் ஒரு நகைசுவைக்காகத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X