முதலீட்டாளர் நலனே முதன்மை: எப்.பி.ஓ.,வை திரும்ப பெற்றது குறித்து அதானி கருத்து

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (39) | |
Advertisement
மும்பை: அதானி நிறுவனங்களின் தொடர் வெளியீடு (எப்.பி.ஓ) பங்கு விற்பனையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ‛முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்' என கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையை
Goutam Adani, Adani Group, Investors, FPO, கவுதம் அதானி, அதானி குழுமம், முதலீட்டாளர்கள், எப்பிஓ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: அதானி நிறுவனங்களின் தொடர் வெளியீடு (எப்.பி.ஓ) பங்கு விற்பனையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ‛முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்' என கருத்து தெரிவித்துள்ளார்.



இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, தற்போது 16வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்த நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான தொடர் பங்கு வெளியீடு (எப்.பி.ஓ) பங்கு விற்பனை மூலம் 4.55 கோடி பங்குகளை விற்று நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்தியது.

பங்குகள் கடும் சரிவை சந்தித்த நிலையிலும் கூட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் என 5.08 கோடி பேர் (112 சதவீதம்) அதானி பங்குகளில் முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால் திடீரென, பங்கு விற்பனையை நிறுத்துவதாக கவுதம் அதானி அறிவித்துள்ளார்.



latest tamil news

இது தொடர்பாக அதானி நேற்று (பிப்.,1) கூறியதாவது: அதானி நிறுவனப் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்ப பெற அதானி குழும இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.

இந்தச் சூழலில் பங்கு விற்பனையைத் தொடர்வது கொள்கை ரீதியாக நியாயமான செயல் அல்ல என்பதால் விற்பனை பரிவர்த்தனையைத் திரும்பப் பெறுகிறோம்.

முதலீட்டாளர்கள் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும். அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news

இன்று கவுதம் அதானி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்ப பெற்ற முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும். என்னை பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலன் முதன்மையானது; மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். எனவே முதலீட்டாளர்களை சாத்தியமான இழப்புகளில் இருந்து காப்பதற்காக எப்.பி.ஓ.,வை திரும்ப பெற்றுள்ளோம்.

இந்த முடிவு எங்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். எங்களின் இருப்புநிலை ஆரோக்கியமானது மற்றும் சொத்துக்கள் வலுவானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

தாமரை மலர்கிறது - தஞ்சை,கனடா
03-பிப்-202302:22:15 IST Report Abuse
தாமரை மலர்கிறது அதானி நாணயமானவர். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைப்பதற்காக அமெரிக்கா செய்யும் சதிவேலை இது. நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரும் பத்து நாள் சம்பளத்தை அடானியின் பங்குகளில் முதலீடு செய்து இந்தியாவின் பெயரை காப்பாற்றுங்கள்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
03-பிப்-202310:09:15 IST Report Abuse
Rajaகனடாவில் இருக்கும் தஞ்சையிலிருந்து தாங்கள் இந்த திட்டத்தை ஆர்மபித்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறீர்கள்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202323:49:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமா மாட்டிக்கிட்டவன், "சார் இது உங்க பர்ஸ்சா? கீழே கெடந்திச்சி, பணம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க" ன்னு சொன்னானாம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202323:47:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கையும் களவுமா மாட்டிக்கிட்டா திருடன், சங்கிலியை திருப்பி கொடுத்துட்டேன். நான் யோக்கியன்னு சொல்றான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X