அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்படணும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
வேலூர்: அனைத்து துறை அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.'கள ஆய்வில் முதல்வர்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதையடுத்து வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்கள்

வேலூர்: அனைத்து துறை அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.




latest tamil news


'கள ஆய்வில் முதல்வர்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


இதையடுத்து வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் செ யல்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.


அனைத்து துறை அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல் வருகிறது. கலெக்டர்கள் அதனை தடுக்க வேண்டும்.



latest tamil news


2022ம் ஆண்டிற்கான சில பணிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. அனைத்து அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் திட்டங்கள் விரைவாக முடிவுறும். அரசின் முன்னுரிமை திட்டங்கள் கூடுதல் கவனத்துடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.


தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-பிப்-202306:19:13 IST Report Abuse
D.Ambujavalli 'எங்களது ட்ரிப்பில் சி திட்டங்கள் நன்கு நிறைவேற அதிகாரிகள் மென்மேலும் நல்ல ஆலோசனை அளித்து, ஒருங்கிணைந்து வசூலை ஒழுங்காக சி. ர. சாலை, உதயநிதி பங்களாவுக்கெல்லாம் பொறுப்பாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் ' என்பதுதான் உள்ளுறைப்பொருள்
Rate this:
Cancel
R Kay - Chennai,இந்தியா
03-பிப்-202300:33:51 IST Report Abuse
R Kay மாநில அரசு அலுவகத்தில் ஏதாவது ஒரு வேலை லஞ்சம் கொடுக்காமல் நடக்குமா? மோடிஜி மாநில அரசு அலுவகங்களில் நிகழும் ஊழலை களைய சாட்டை எடுக்கவேண்டும் விரைவில்.
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
02-பிப்-202323:35:36 IST Report Abuse
THENNAVAN லஞ்சம் வாங்குவதில் உங்களோடு ஒன்றினைந்துபொது மக்களையும் தற்கொலை செய்யும் நிலைக்கு கொண்டு செல்வது போதாதா இன்னும் எதில் ஒன்றினையனும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X