பொது சிவில் சட்டம் முடிவு எடுக்கவில்லை: கிரண் ரிஜிஜூ

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார்.பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார்.




latest tamil news


பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



latest tamil news


இது தொடர்பாக ராஜ்யசபாவில் அவர் அளித்த விளக்கம்: சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு, 21வது சட்ட ஆணையத்திடம் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பொது சிவில் சட்டம் குறித்து 21-வது சட்ட ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்னே அதன் பதவிக்கால முடிவடைந்து விட்டது.


பொது சிவில் சட்டம் குறித்து 22-வது சட்ட ஆணையம் முடிவெடுக்கலாம். எனவே, ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

M Ramachandran - Chennai,இந்தியா
02-பிப்-202320:21:23 IST Report Abuse
M  Ramachandran யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை. பொது சிவில் சட்டm நாட்டுக்கு அவசியா மான ஒன்று ..எதிர்ப்பவர்கள் அரசியல் காரணத்திற்க்காக அந்நிய தலையயீடாய்ய்ய தவிர்க்க உதவும் . தவிர பக்கத்துக்கு நாடுகளிலிருந்து இஙகு நுழைய்யந்து மக்களுக்கும் அரசுக்கும் சட்ட பிரச்னை யேற்படுத்துகிறார்கள் .
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
02-பிப்-202319:17:23 IST Report Abuse
GMM தாவா நீதிமன்றம் வந்த பின் ஒரு தீர்வு பெற ஒரு சட்டம் (CCC) அவசியம். ஆனால் இது தருணம் அல்ல. பொதுநல வழக்கு முறை படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் அனைத்து வித வழக்குகளிலும் மனு தாக்கல் செய்தது சரியா? விஷயம் புரியாமல் வாய்தா வாங்கும் நிலை இருக்கிறது? வாதி, பிரதி வாதி இருவருக்கும் பலன் பாதிப்பு இருக்க வேண்டும். மாநில, மத்திய தலைமை அதிகாரியை வழக்கில் சேர்க்கும் போது முறையே கவர்னர், ஜனாதிபதி அலுவலக அனுமதி பெற வேண்டும். கோலிஜியம் மாற்று சாதி, மத, இனம், இட ஒதுக்கீடு அடிப்படையில் கூடாது.
Rate this:
Cancel
R Kay - Chennai,இந்தியா
02-பிப்-202318:15:03 IST Report Abuse
R Kay சீக்கிரமாக முடிவெடுத்து செயல்படுத்துங்கள். எல்லோரும் இங்கு சமம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X