மேயரை வெளியேற்றிய முதல்வரின் பாதுகாவலர்கள்

Added : பிப் 02, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
வேலுார்:முதல்வர் பங்கேற்ற விழாவில், தாமதமாக வந்த வேலுார் மேயர் சுஜாதாவை முதல்வரின் பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நேற்று மதியம் 12:30 மணிக்கு நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.விழா தொடங்கி சிறிது நேரம் கழித்து தாமதமாக மதியம் 1:00
மேயரை வெளியேற்றிய முதல்வரின் பாதுகாவலர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார்:முதல்வர் பங்கேற்ற விழாவில், தாமதமாக வந்த வேலுார் மேயர் சுஜாதாவை முதல்வரின் பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.


வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நேற்று மதியம் 12:30 மணிக்கு நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.விழா தொடங்கி சிறிது நேரம் கழித்து தாமதமாக மதியம் 1:00 மணிக்கு வேலுார் மேயர் சுஜாதா விழா மேடைக்கு வந்தார்.


முதல்வரின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். விழா தொடங்கி விட்டதால், தயவு செய்து நீங்கள் போய் விடுங்கள் என்று பாதுகாவலர்கள் கூறினர்.அவர்களிடம் சிறிது நேரம் வாக்கு வாதத்ததில் ஈடுபட்ட மேயர் சுஜாதாவை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். முதல்வர் பங்கேற்கும் விழாவில் ஒரு மேயரை தாமதமாக வரலாமா என தி.மு.க., வினர் குற்றம் சாட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

katharika viyabari - coimbatore,இந்தியா
03-பிப்-202317:38:24 IST Report Abuse
katharika viyabari விழா 12:30க்கு தொடங்கியதே பல மாடல் அல்லக்கைகள் தாமதமாக வந்ததினால்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
03-பிப்-202315:45:52 IST Report Abuse
கல்யாணராமன் சு. பாதுகாவலர்கள் செய்தது சரிதான்....... ஒரு அடிப்படை நாகரீகம் வேண்டும் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அரை மணிநேரம் தாமதமாக வருவது அந்த பெண்மணியின் ஆணவத்தை காண்பிக்கிறது .... இவங்க தலைமை ஏற்கின்ற நிகழ்ச்சிக்கு அலுவலர்கள் தாமதமாக வந்தால் ஏற்றுக்கொள்வாரா ??
Rate this:
Raa - Chennai,இந்தியா
06-பிப்-202312:40:55 IST Report Abuse
Raaஅந்த நாகரீகம் அந்த அரசியல் வாதிகளுக்கு உண்டா? பல விழாக்களில் பள்ளி மாணாக்கர்கள் வெய்யிலில் வாடுவதை பார்த்திருக்கிரோம்...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-பிப்-202310:55:21 IST Report Abuse
sankaranarayanan முதல்வரை பார்க்க திராவிட மாடல் அரசியலில் ஒரு பெண் மேயர் காரின் படிக்கட்டில் தொங்கல் - இன்னொரு பெண் மேயர் முதல்வர் பங்குகொள்ளும் விழாவில் கலந்துகொள்ளாமல் விழா மேடைக்கு வெளியே படிக்காட்டிலே திருப்பி அனுப்புதல் - அடுத்தது எந்த ஊரில் எந்த பெண் மேயருக்கு எப்படி நடக்கப்போவது தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X