பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

Added : பிப் 02, 2023 | |
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி,
 பிரம்மபுரீஸ்வரர் கோவில்  தேரோட்டம் கோலாகலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி, குளக்கரையில் இருந்து, கோவில் வந்தடைந்த பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பட்டுவதனாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று காலை, ரதோற்சவ நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மலர் அலங்காரத்தில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

அதை தொடர்ந்து, தேரின் வடம் பிடித்த பக்தர்கள், மாடவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இழுத்தனர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X