திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், சின்னமண்டலி ஊராட்சியில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமை, திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார்.
இதில், கால்நடை உதவி மருத்துவர் பிரியாலட்சுமி, பங்கேற்று கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை சிகிச்சை, கோழி, ஆடுகளுக்கு தடுப்பூசி உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில், ஊராட்சிகளையும் சேர்த்து பசுக்கள் 359, வெள்ளாடுகள் 262, எருமைகள் 10, கோழிகள் 196, செயற்கை முறை கருவூட்டல் ஆறு, என, மொத்தம் 833 கால்நடைகளுக்கு சிகிக்சை அளித்தனர்.