கணினி டிக்கெட் மையம் புட்லுாரில் அமைக்க மனு

Added : பிப் 02, 2023 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புட்லுார் ரயில் நிலையம் அருகில், காக்களூர் தொழிற்பேட்டை, அங்காள பரமேஸ்வரி கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளன. தினசரி வேலை மற்றும் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.இங்கு தனியார் வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. முன்னரே அச்சடிக்கப்பட்ட விலையில், சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புட்லுார் ரயில் நிலையம் அருகில், காக்களூர் தொழிற்பேட்டை, அங்காள பரமேஸ்வரி கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளன. தினசரி வேலை மற்றும் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.

இங்கு தனியார் வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. முன்னரே அச்சடிக்கப்பட்ட விலையில், சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது.

தாம்பரம், கிண்டி, மாம்பலம், பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து நேரடி டிக்கெட் வழங்குவதில்லை.

விரைவு ரயில்களில் முன்பதிவற்ற டிக்கெட்டும் கிடைப்பதில்லை. இதனால் பயணியர் பல்வேறு வகையில் கடும் அவதிப்படுகின்றனர்.

தற்போது வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் நிலையில், புட்லுாரில் இதற்கான டிக்கெட் வழங்கப்படவில்லை.

எனவே, அனைத்து ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிக்கும் வகையில் முன்பதிவற்ற கணினி டிக்கெட் வழங்கும் மையம் அமைக்க வேண்டும் என, புட்லுார் ரயில் பயணியர் சங்க நிர்வாகி ராகவேந்திர பட், தெற்கு ரயில்வே துறைக்கு மனு அளித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X