திருத்தணி:திருத்தணி அடுத்த, சத்திரஞ்ஜெயபுரம் கிராமம் அருகே, வெங்கடகுளத்தில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
நேற்று அவ்வழியாக சென்றவர்கள் குளத்தில் முதியவர் பிணம் மிதப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை. மேலும் போலீசார் முதற்கட்ட விசாரணையில், குளத்தின் கரையில் இறந்தவரின் வேட்டி, சட்டை, செருப்பு போன்றவை இருப்பதால் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.