பழநி:பழநி கோவில் தைப்பூச திருவிழாவில் இன்று, வள்ளி - தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜன., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வள்ளி -- --- தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தங்க பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
விழாவின் ஆறாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு வள்ளி - தெய்வானையுடன், முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். தைப்பூச திருவிழாவான நாளை மதியம் 12:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள, மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
வரும் 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடக்கிறது.