19 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்கிறது

Added : பிப் 02, 2023 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில், 19 அரசு மருத்துவமனைகளை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம், தாம்பரம், பழநி, திருக்கோவிலுார், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலுார், திருத்தணி,

சென்னை:தமிழகத்தில், 19 அரசு மருத்துவமனைகளை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.

புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம், தாம்பரம், பழநி, திருக்கோவிலுார், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலுார், திருத்தணி, வள்ளியூர்.

திருப்பத்துார், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம், அருப்புக்கோட்டை ஆகிய, 19 இடங்களில் உள்ள, அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில், அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

அதன்படி, 19 அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X