சென்னை:கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுத்து, மக்கள் போராட்டத்துக்கு வித்திட்ட அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி, சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருது விடும் திருவிழாவுக்கு, காரணமே இல்லாமல் அனுமதி மறுத்து, ஓசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து போகும் அளவு, மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டுள்ள, தி.மு.க., அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
கண்ணீர் புகை வீசி கட்டுப்படுத்தும் அளவுக்கு போராட்டம் வலுத்திருப்பதை உணரத் தவறியது, உளவுத் துறையின் தோல்வி. மக்கள் பிரச்னைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என, அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.