One cannot ban contest in 2nd block | ஒருவர் 2 தொகுதியில் போட்டி தடை செய்ய முடியாது| Dinamalar

ஒருவர் 2 தொகுதியில் போட்டி தடை செய்ய முடியாது

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (4) | |
புதுடில்லி, ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை கோரும் வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது குறித்து பார்லிமென்டே முடிவு செய்ய முடியும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை கேட்டு, புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில்
One cannot ban contest in 2nd block   ஒருவர் 2 தொகுதியில் போட்டி தடை செய்ய முடியாது

புதுடில்லி, ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை கோரும் வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது குறித்து பார்லிமென்டே முடிவு செய்ய முடியும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை கேட்டு, புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news


மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதி வழங்கப்படுகிறது. இது, தேவையில்லாத குழப்பம், வீண் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றால், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது.

இதனால், அங்கு மீண்டும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.

இது, தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் வேலை பளுவை ஏற்படுத்துவதுடன், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.

இதனால், ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட

தொடர்ச்சி 7ம் பக்கம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X