நீதிபதிகள் பரிந்துரையில் தாமதம்: பார்லிமென்டில் அரசு தகவல்

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :'உயர் நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதிகள் பதவியிடங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயத்தை, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மீறியுள்ளன' என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' முடிவு செய்யும். இந்த நியமன
Delay in nomination of judges: Government briefing in Parliament  நீதிபதிகள் பரிந்துரையில் தாமதம்: பார்லிமென்டில் அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :'உயர் நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதிகள் பதவியிடங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயத்தை, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மீறியுள்ளன' என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' முடிவு செய்யும். இந்த நியமன முறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.



ஆறு மாதம்


இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று நீதித் துறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து கூறியுள்ளதாவது: தற்போதுள்ள நடைமுறைகளின்படி, உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பதவியிடங்கள் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, அது தொடர்பான பரிந்துரையை அனுப்ப வேண்டும்.


இதை, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற கொலீஜியம், மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த பரிந்துரை குறித்து உளவு அமைப்பின் கருத்துக்களுடன் தலைமை நீதிபதி உட்பட ஐந்து பேர் உறுப்பினர்களாக உள்ள உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால், ஆறு மாதங்கள் என்ற கால நிர்ணயத்தை பெரும்பாலான உயர் நீதின்றங்கள் மீறி வருகின்றன.


latest tamil news



பரிசீலனை


இந்தாண்டு ஜன., 30ம் தேதி நிலவரப்படி, ஏற்கனவே காலியாக உள்ள 191 நீதிபதி பதவியிடங்கள் மற்றும் அடுத்த ஆறு மாதங்களில் காலியாக உள்ள 45 இடங்கள் என, 236 இடங்களுக்கான பரிந்துரைகள் உயர் நீதிமன்ற கொலீஜியத்திடம் இருந்து வரவில்லை.


ஜன., 30ம் தேதி நிலவரப்படி, 18 பரிந்துரைகள் தொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆறு பேரின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏழு பரிசீலனைகளில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் கருத்துகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கோரியுள்ளது.


உயர் நீதிமன்ற கொலீஜியங்கள் அனுப்பியுள்ள, 142 பரிந்துரைகள் பல்வேறு கட்ட பரிசீலனையில் உள்ளன. இதில், நான்கு பரிந்துரைகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளன. மீதமுள்ள, 138 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.


உச்ச நீதிமன்றத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 34 நீதிபதி பதவியிடங்களில், தலைமை நீதிபதி உட்பட, 27 பேர் தற்போது பணியில் உள்ளனர். காலியாக உள்ள ஏழு இடங்களுக்கான பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ளது.


உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுப்பியுள்ள பரிந்துரையை மறுஆய்வு செய்யும்படி மத்திய அரசால் கேட்க முடியும்.ஜன., 30ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 1,108 நீதிபதி பதவியிடங்களில், 333 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

03-பிப்-202311:08:48 IST Report Abuse
ஆரூர் ரங் ஏற்கனவே நியமனத்துக்கு சிபாரிசு செய்யபட்ட இருவர் தீவீர மோதி எதிர்பாளர்கள். ஆனாலும் கொலீஜியம் அவர்களது பெயர்களை ஏற்குமாறு சட்ட அமைச்சகத்தை வலியுறுத்துகிறது😮‍💨. அதே நேரத்தில் தமிழகதிலிருந்து யாரை சிபாரிசு செய்தாலும் நம்மவர்களே மொட்டை பெட்டிஷன் போட்டு😝 வாய்ப்பைக் கெடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03-பிப்-202310:02:18 IST Report Abuse
Sridhar இவங்களுக்கு கபில் சிபல் மாதிரியான ஆட்கள்தான் லாயக்கு. அந்த ஆளு வெறும் 45 MP வச்சிருக்கற கட்சியில இருந்துகிட்டு இவிங்களுக்கு ஒரு கொடச்சல் குடுதான்ப்பாருங்க... அப்பப்பா தலைலேந்து கால் வர ஆடிப்போயிட்டானுங்க. பார்லிமென்டுக்கு சம்மன் பண்ணி பட்டய மாட்டிவிட்டா தான் சரியாவானுங்க. குழந்தைப்பசங்க, கண்டிப்பா நடந்தா ஒழுங்கா செயல்படுவாங்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-பிப்-202305:02:51 IST Report Abuse
Kasimani Baskaran நீதித்துறையில் உள்ளவர்களை உளவு அமைப்புக்கள் நிரந்தரமாக சல்லடை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நேர்மையற்றவர்கள், கட்சி சார்பாக செயல்படுபவர்கள் திருட்டு வழியில் சொத்து சேர்ப்போர் போன்ற பிரிவுகளை பரிந்துரை செய்தால் உடலே அவர்களை வேலையை விட்டே தூக்க வேண்டும். நீதிபதிகள் நியமணத்தில் நீக்குப்போக்காக நடந்து கொள்லவே கூடாது. நீதிபதிகளுக்கும் கூட சட்டம் பொருந்தும் என்பதை அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X