வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்று, தி.மு.க., பொருளாளர், டி.ஆர். பாலு பேசியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே இப்படி பேசினால், தி.மு.க.,வில் உள்ள மற்றவர்களை பற்றி சொல்லத் தேவையில்லை.
பாலு போன்றவர்கள், தங்களின் பேச்சு வாயிலாக, வன்முறைக்கு பெயர் பெற்ற கட்சி, தி.மு.க., என, உறுதிப்படுத்துகின்றனர். திராவிட மாடல் எத்தனை பயங்கரமானது என்பதையும், நமக்கு புரிய வைக்கின்றனர்.
இந்த மகானுபாவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், மத்திய அமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலையில் இருந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினாராம்; ஆனாலும், எந்தத் தெய்வமும் இவரை ஒன்றும் செய்யவில்லையாம்.
இவர் ஒரு உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... மனிதர்களைப் போல, தெய்வம் அவ்வளவு எளிதில் யாரையும் பழி வாங்கி விடாது; தெய்வம் நின்று தான் கொல்லும்.
![]()
|
டி.ஆர்.பாலு அவர்களே... இறைவனையோ, அவனின் பக்தர்களையோ, மனம் புண்படும்படி பேசியிருந்தால், அதற்கான கூலியை நிச்சயம் ஒரு நாள் பெறுவீர்கள். நீங்கள் இன்று செய்யும் தவறுகள், நாளை உங்கள் வாரிசுகளை பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ராமாயணம் கட்டுக்கதையாகவே இருக்கட்டும்; அதிலுள்ள தத்துவங்கள் பூஞ்சை கண்களுக்கு புலப்படாது. கடந்த அரை நுாற்றாண்டாக, மக்களின் ஓட்டுகளை பெற, தி.மு.க., அள்ளிவிட்ட கட்டுக் கதைகளை போல, வேறு புராண கட்டுக் கதைகள் இருக்க முடியுமா?
சமீப நாட்களாக, தி.மு.க., மூத்த தலைவர்களின் நாக்கில், சனி பகவான் குடியேறியுள்ளார். அதனால் தான், தாறுமாறாகப் பேசுகின்றனர். மொத்தத்தில் சனிப் பெயர்ச்சி, தி.மு.க.,விற்கு நன்றாகவே வேலை செய்கிறது.
'தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை ஆட்சிக்கு வராது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி சொன்னதை, டி.ஆர்.பாலு போன்றவர்களின் பேச்சுகள் நிச்சயம் உறுதி செய்து விடும்.