சனிப் பெயர்ச்சி வேலை செய்கிறது!

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (56) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்று, தி.மு.க., பொருளாளர், டி.ஆர். பாலு பேசியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே இப்படி பேசினால்,
TR Baalu, DMK, TR Balu, MK Stalin, திமுக, ஸ்டாலின், டிஆர் பாலு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்று, தி.மு.க., பொருளாளர், டி.ஆர். பாலு பேசியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே இப்படி பேசினால், தி.மு.க.,வில் உள்ள மற்றவர்களை பற்றி சொல்லத் தேவையில்லை.


பாலு போன்றவர்கள், தங்களின் பேச்சு வாயிலாக, வன்முறைக்கு பெயர் பெற்ற கட்சி, தி.மு.க., என, உறுதிப்படுத்துகின்றனர். திராவிட மாடல் எத்தனை பயங்கரமானது என்பதையும், நமக்கு புரிய வைக்கின்றனர்.


இந்த மகானுபாவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், மத்திய அமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலையில் இருந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினாராம்; ஆனாலும், எந்தத் தெய்வமும் இவரை ஒன்றும் செய்யவில்லையாம்.


இவர் ஒரு உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... மனிதர்களைப் போல, தெய்வம் அவ்வளவு எளிதில் யாரையும் பழி வாங்கி விடாது; தெய்வம் நின்று தான் கொல்லும்.


latest tamil news

டி.ஆர்.பாலு அவர்களே... இறைவனையோ, அவனின் பக்தர்களையோ, மனம் புண்படும்படி பேசியிருந்தால், அதற்கான கூலியை நிச்சயம் ஒரு நாள் பெறுவீர்கள். நீங்கள் இன்று செய்யும் தவறுகள், நாளை உங்கள் வாரிசுகளை பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


ராமாயணம் கட்டுக்கதையாகவே இருக்கட்டும்; அதிலுள்ள தத்துவங்கள் பூஞ்சை கண்களுக்கு புலப்படாது. கடந்த அரை நுாற்றாண்டாக, மக்களின் ஓட்டுகளை பெற, தி.மு.க., அள்ளிவிட்ட கட்டுக் கதைகளை போல, வேறு புராண கட்டுக் கதைகள் இருக்க முடியுமா?


சமீப நாட்களாக, தி.மு.க., மூத்த தலைவர்களின் நாக்கில், சனி பகவான் குடியேறியுள்ளார். அதனால் தான், தாறுமாறாகப் பேசுகின்றனர். மொத்தத்தில் சனிப் பெயர்ச்சி, தி.மு.க.,விற்கு நன்றாகவே வேலை செய்கிறது.


'தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை ஆட்சிக்கு வராது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி சொன்னதை, டி.ஆர்.பாலு போன்றவர்களின் பேச்சுகள் நிச்சயம் உறுதி செய்து விடும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (56)

zakir hassan - doha,கத்தார்
05-பிப்-202310:16:31 IST Report Abuse
zakir hassan யாருக்கும் தீர்காயுசு கிடையாது எல்லோரும் ஒரு நாள் சாவு உறுதி இந்த கட்டுரையை எழுதியவர் உள்பட, ராமர் பிறந்த பூமி என்று வேற்று மத வழிப்பாட்டு தளத்தை இடிக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கு அந்த நிலைதானே ஏற்படும் என்று இந்த நபர் நம்புவாரா? இல்லை ரோடு போடா தன்னோட நிலத்தில் ஒரு குழி இடம் கொடுப்பாரா? அந்த காலங்களில் ஊருக்கு ஒரு கோவில் இருந்தது, பிறகு சாதிக்கு ஒரு கோவில் இப்ப ஒவ்வொரு வரும் கோவில் கட்டுகிறார்கள் இதில் பெரும்பான்மையானவை அக்கிரப்புகள் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பொது சிலவற்றை தவிர்க்க முடியாது
Rate this:
Cancel
Sangi - Chennai,இந்தியா
04-பிப்-202308:24:14 IST Report Abuse
Sangi இந்து பெண்கள் எல்லாம் சொன்னவனுக்கு வாக்களித்த இந்துக்கள் இதைவிட இன்னும் திருந்த மாட்டார்கள்.
Rate this:
Cancel
s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-202304:05:55 IST Report Abuse
s. mohan நீங்கள் ஒருநாள் அழியப்போவது உறுதி, ஏன் வீரமணியிடம் இருந்து பணம் வாங்கிவிட்டீர்களா? இல்லை வேற்று கருங்காலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பேசுகிறீர்களா, இல்லை என்ன பேசினாலும் ஹிந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா? காலம் ஒருநாள் கைக்கொடுக்கும் அதுவரை வாழ்ந்துவிடு!!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X