சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று(பிப்.,3) கனமழை பெய்யும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை: வங்கக் கடலில், சில நாட்களாக நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை, இலங்கையில் திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது.
இது, தொடர்ந்து தென்மேற்கு திசையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று(பிப்.,3) கனமழை பெய்யும்.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை: வங்கக் கடலில், சில
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement