விவசாயிகளை அதிகாரிகள் யாரும் தேடி போய் பார்க்கறதே இல்லை!

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
''அதிகாரிகள் தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவிடம், ''சீக்கிரம் சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''வார இறுதி நாட்கள்ல, விவசாயிகளை அவா இடத்துக்கே தேடிப் போய் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் சந்திக்கணும்... அப்ப, வேளாண் சாகுபடியை அதிகரிக்க ஆலோசனைகள் தரணும் ஓய்...''ஆனா, இப்ப கொஞ்ச நாளா விவசாயிகளை யாரும் தேடி போய் பார்க்கறதே
வேளாண்மை, தோட்டக்கலை,அலுவலர்கள்,விவசாயி,அதிகாரி

''அதிகாரிகள் தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவிடம், ''சீக்கிரம் சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''வார இறுதி நாட்கள்ல, விவசாயிகளை அவா இடத்துக்கே தேடிப் போய் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் சந்திக்கணும்... அப்ப, வேளாண் சாகுபடியை அதிகரிக்க ஆலோசனைகள் தரணும் ஓய்...


''ஆனா, இப்ப கொஞ்ச நாளா விவசாயிகளை யாரும் தேடி போய் பார்க்கறதே இல்லை... சென்னையில இருந்து வேளாண்மை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடத்தற, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்கள்ல பங்கேற்கவே, அதிக நேரத்தை மாவட்ட அதிகாரிகள் செலவிடறா ஓய்...


latest tamil news

''அதே மாதிரி, மத்திய வேளாண் துறை சார்புலயும், அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களை நடத்தறா... அதுலயும் மாவட்ட அதிகாரிகள் கலந்துக்கறா ஓய்...


''இதனால, வேளாண் துறை ஆபீசுக்கு வர்ற விவசாயிகளையும் அதிகாரிகள் சந்திக்கறது இல்லை... 'நம்மையும் தேடி வர மாட்டேங்கறா... நாம வந்தாலும், பார்க்க முடியறது இல்லையே'ன்னு விவசாயிகள் தரப்பு புலம்பறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-பிப்-202309:19:49 IST Report Abuse
NicoleThomson விவசாயிகள் விளக்குமாறு என்று ஒன்றை வைத்திருப்பார்கள் ஆனால் இந்த அதிகாரிகள் ஓடிவருவார்கள், ஓசூர் சூளகிரியில் பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் தமிழக விவசாயிகளும் பார்த்திருப்பார்கள்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
03-பிப்-202309:00:04 IST Report Abuse
R.RAMACHANDRAN அதிகார வர்க்கத்திற்கு மக்களுக்கு சேவை செய்ய மாதந்தோறும் சம்பளம் வாகன வசதி போன்றவை மக்கள் செலுத்தும் வரி பணத்திலிருந்து அளித்தாலும் அவர்கள் பொது ஊழியர்களாக தங்களை கருதாமல் எஜமானர்களாக கருதி லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாந்து இருக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X