வடபழநி கோவிலில் நாளை தைப்பூசம்

Added : பிப் 03, 2023 | |
Advertisement
சென்னை: ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.வடபழநி ஆண்டவர் கோவிலில், நாளை(பிப்.,4), தைப்பூசம் நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வரும் பாலால், முருகப்
vadapalani murugan temple,வடபழநி ஆண்டவர் கோவில், தைப்பூசம்

சென்னை: ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நாளை(பிப்.,4), தைப்பூசம் நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வரும் பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின், செண்பகப்பூ அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.


இரவு 8:30 மணிக்கு, பழநி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X