கோவை: கோவை-தன்பாத் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவையானது இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - கோவை இடையேயான வாராந்திர சிறப்பு ரயிலானது ஜன., மாதம் வரை இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக பிப்., மற்றும் மார்ச் மாதங்களுக்கு இச்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும், 5 முதல் மார்ச், 26ம் தேதி வரை தன்பாத்தில் இருந்து ஞாயிறு தோறும் காலை, 6:00 மணிக்கு புறப்படும் ரயில்(03357) செவ்., அதிகாலை, 4:00க்கு கோவை வந்தடையும். வரும், 8 முதல் மார்ச், 29ம் தேதி வரை கோவையிலிருந்து புதன் தோறும் நள்ளிரவு, 12:50க்கு புறப்படும் ரயில்(03358) வியாழன் இரவு, 10:30க்கு தன்பாத் சென்றடையும்.
இந்த ரயிலானது ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், சம்பல்பூர், ரூர்கேலா, ராஞ்சி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.