வடமாநிலத்தவர் வீடியோ மீண்டும் 'வைரல்'; வதந்தி பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 45; பனியன் தொழிலாளி. கடந்த, 29ம் தேதி இரவு, 8:00 மணியளவில் டியூசனுக்கு சென்ற மகளை அழைத்து வர, நியூ திருப்பூரில் இருந்து பொங்குபாளையத்துக்கு இவர் டூவீலரில் சென்றார்.அப்போது, பரமசிவம்பாளையத்தில் ரோட்டில் நடந்து சென்ற வடமாநில வாலிபர் மீது வாகனம் மோதியது. இதில், வாலிபரின் மொபைல் போன் சேதமானது. இருதரப்பு
Tirupur, Northerners, Rumours, திருப்பூர், வதந்தி, வடமாநில வாலிபர், பனியன் தொழிலாளி, North State Youth, Banyan Worker,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 45; பனியன் தொழிலாளி. கடந்த, 29ம் தேதி இரவு, 8:00 மணியளவில் டியூசனுக்கு சென்ற மகளை அழைத்து வர, நியூ திருப்பூரில் இருந்து பொங்குபாளையத்துக்கு இவர் டூவீலரில் சென்றார்.

அப்போது, பரமசிவம்பாளையத்தில் ரோட்டில் நடந்து சென்ற வடமாநில வாலிபர் மீது வாகனம் மோதியது. இதில், வாலிபரின் மொபைல் போன் சேதமானது. இருதரப்பு பேச்சுக்கு பின், வடமாநில வாலிபருக்கு, 500 ரூபாயை சம்பத் கொடுத்து சென்றார்.

இச்சூழலில், வடமாநில வாலிபர் டூவீலர் மீது ஏறி அமர்ந்து டூவீலரை தர மறுப்பது, அந்த நபரிடம் சம்பத் டூவீலரை தர வலியுறுத்துவது போன்ற காட்சிகளுடன், வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே கடந்த மாதம் வடமாநில வாலிபர்கள் விரட்டும் வீடியோ பூதாகரமானது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news

தற்போதைய வீடியோ குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் விசாரித்தனர். அதில், சிறிய விபத்தில் இருதரப்பும் பேச்சு நடத்தி சமாதானமாக சென்றதும், சம்பத் தரப்பு புகார் கொடுக்க முன்வரவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருவதால், சம்பத்குமார் வாக்குமூலமாக ஒரு வீடியோ பதிவிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

'டூவீலரை பறித்து அட்டகாசம்; தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல்' என, தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த வதந்தியை நம்ப வேண்டாம்; பொய்யானது. வதந்தியை பரப்பிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

g.s,rajan - chennai ,இந்தியா
03-பிப்-202321:01:26 IST Report Abuse
g.s,rajan இப்போ தமிழ்நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள்தான் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர்,பிற மாநிலங்களில் வேலைவாய்ப்பும் குறைவு போதுமான தொழில்களும் சரியாக இல்லாததால் தமிழ்நாட்டுக்கு வந்து பிழைக்கின்றனர் . ,கட்டுமானத் தொழில்கள் ,தொழிற்சாலைகள் ,ஹோட்டல்கள் ,டீக்கடைகள் இது தவிர பல கடைகள் எல்லாவற்றிலும் வடமாநிலத்தவர்கள் தான் அதிகம் வேலை பார்க்கின்றனர்.குறைந்த கூலிக்கு முதலில் வேலை பார்க்கின்றனர் பிறகு வேலையைக் கற்றுக்கொண்டு அதிகம் சம்பாதிக்கின்றனர் . நமது தமிழ்நாட்டுக்கு குடிமகன்கள் குடிக்கு அடிமையாகி விட்டதால் ஒரு புறம் குடித்தே அழிகின்றனர் ,மறுபுறம் அதிக சம்பளம் கேட்டு கட்டுப்படியாகவில்லை என்று கூறி வேலைக்கு வராமல் தவிர்க்கின்றனர் ,ஆனால் மற்ற மாநிலத்தவர்கள் நேரம் காலம் பார்க்காமல் மிக மிகக் கடுமையாக உழைக்கின்றனர்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-பிப்-202319:16:54 IST Report Abuse
NicoleThomson வட நாட்டில் வங்கதேசத்தினர் என்று தான் தலைப்பு இருக்க வேண்டும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
03-பிப்-202316:44:17 IST Report Abuse
M  Ramachandran எல்லாம் நம்ம வங்காளத்திலிருந்து சேச்சி இறக்குமதி செய்து தென் மாநீலன்களுக்கு அனுப்பும் எஜன்ட் வேலை செய்வதால் தான. அதற்க்கு இஙகு இருக்கும் அரசும் (ஓட்டுக்காகா) உடந்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X