''அமைச்சர்களுக்கும், கலெக்டருக்குமே 'அல்வா' குடுத்துட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மதுரை மாவட்டத்துல, சமீபத்துல, 202 தலையாரிகளை நியமிச்சாங்க... அமைச்சர்கள், ஆளுங்கட்சி புள்ளிகள் சிபாரிசுகள் நிறைய வரவே, 'டென்ஷன்' ஆன கலெக்டர், கீழ்மட்ட அதிகாரிகளை கூப்பிட்டு, 'நேர்மையான முறையில நியமனங்களை பண்ணுங்க... யார் சிபாரிசுக்கும் இடம் தராதீங்க'ன்னு கண்டிப்பா சொல்லிட்டாருங்க...
![]()
|
''இதன்படி, பல தாலுகாக்கள்ல அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிபாரிசுகளை, அதிகாரிகள் அடியோட புறக்கணிச்சிட்டாங்க... அதே நேரம், இதையே சாக்கா பயன்படுத்தி, சில அதிகாரிகள், தங்களுக்கு வேண்டியவங்களின் பிள்ளைகள், சொந்தக்காரங்களை, தலையாரிகள் பட்டியல்ல புகுத்திட்டாங்க...
''இதைக் கேள்விப்பட்ட ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்கள், 'தலையாரி வேலை கூட வாங்கி தர முடியலைன்னா, தொண்டர்கள் எப்படி எங்களை மதிப்பாங்க'ன்னு அமைச்சர்களிடம் புலம்பிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.
Advertisement