தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம்: புத்த மதத் தலைவர்கள் எதிர்ப்பு

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் அரசியல் சாசனத்தின் 13 ஏ பிரிவை செயல்படுத்த, புத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ௧௯௮௭ல் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்தில் இது தொடர்பாக
Tamils,Sri Lanka,Buddhist,13A,political autonomy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் அரசியல் சாசனத்தின் 13 ஏ பிரிவை செயல்படுத்த, புத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ௧௯௮௭ல் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ள ௧௩ ஏ சட்டப் பிரிவை முழுமையாக நடைமுறைபடுத்த, நம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கை பார்லிமென்ட் கூட்டத் தொடர், பிப்., ௮ம் தேதி துவங்க உள்ளது. இதில், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் அறிவிப்பை வெளியிட அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டிருந்தார். இது குறித்து அவர் சமீபத்தில் அறிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், புத்த மதத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சில தலைவர்கள் விக்ரமசிங்கேவை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவை அமல்படுத்தினால், நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும். இது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும்.

இத்தனை ஆண்டுகளாக எந்த அதிபரும் இதை செயல்படுத்த முன்வராததற்கு இதுவே காரணம். நம் நாட்டின் நலனுக்கு எதிரான அந்த சட்டப் பிரிவை அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம், 2.2 கோடி மக்கள்தொகை உள்ள இலங்கையில், சிங்களத்தவர், ௭௫ சதவீதம் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் தமிழர்கள், 15 சதவீதம் பேர் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

Nachiar - toronto,கனடா
03-பிப்-202318:42:40 IST Report Abuse
Nachiar ஒரு இந்திய பூர்விக இலங்கை தமிழனாகவோ ஒரு இந்துவாகவோ ஒரு சிங்களவனாகவோ இருந்தால் அவர்களுக்கு இந்த மாநில ஆட்சி என்பது முழுக்க ஏற்றிக்கொள்ளப்படக் கூடியது இல்லை. ஏனென்றால் (1). தமிழர் பகுதிகளை ஆட்சி செய்யப்போவது என்னவோ புலம் பெயர்ந்த வெளிநாட்டுத் தமிழர்களே. (2). புலிகளின் காலத்திலும் இப்பொழுதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டுத் ஈழ தேசியத்தை இயக்குவது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சர்ச். (3). இந்திய வம்சாவளித் தமிழர்கள் யாழ்ப்பாணத்தவருடன் வாழ அன்றும் இன்றும் என்றும் விரும்புவதில்லை. மானத்துடன் நிம்மதியாக வாழவும் முடியாது. சுரண்டல் என்ற சொல்லுக்கு உவமானம் தேடினால் இங்கு கிடைக்கும். (4). தமிழ் பகுதிகளையும் எடுத்துக்கொண்டு சிங்களப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். இன்று வெளிநாடு வாழ் யாழ்ப்பாணத்தவர் நிலம் சொத்து வாங்குவது சிங்கள பகுதிகளிலேயே. அதனால் சிங்களவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலில் சிங்களவனால் சர்ச்சினால் ஆக்கிரமிக்கப் பட்ட இந்து கோவில்கள் கோவில் நிலங்கள் மீட்கப்பட இந்திய ஆதரவு வேண்டும். முழு பூசணிக்காயை கேட்கமால் இப்படி தனிப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுத்து சென்றால் அதிக பலன் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அதிகம். ஜெய் பாரத்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
03-பிப்-202315:48:28 IST Report Abuse
Murthy இது தெரிந்த ஒன்றுதான்......இந்தியாவால் எதுவும் செய்யமுடியாது......
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
03-பிப்-202314:25:52 IST Report Abuse
chennai sivakumar ஆச்சரியம் அடைவதற்கு ஒன்றும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X