செயலற்ற தமிழக அரசு: கே.பி.முனுசாமி

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் முனுசாமி கூறியதாவது:ஓசூர் அருகில் கோபச்சந்தரத்தில் நடந்த எருது விடும் விழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு முறையான அணுகுமுறையை கையாளவில்லை. பொதுவாக எருது விடும் விழா என்பது பாரம்பரியமாக இங்குள்ள இளைஞர்களால் ஒரு திருவிழா போல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை
செயலற்ற தமிழக அரசு: கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் முனுசாமி கூறியதாவது:

ஓசூர் அருகில் கோபச்சந்தரத்தில் நடந்த எருது விடும் விழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு முறையான அணுகுமுறையை கையாளவில்லை. பொதுவாக எருது விடும் விழா என்பது பாரம்பரியமாக இங்குள்ள இளைஞர்களால் ஒரு திருவிழா போல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முறைப்படுத்தி அனுமதி கோரியவுடன் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

எருது விடும் விழா உத்தரவு குளறுபடியால் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தமிழக அரசு, செயலற்ற தன்மையில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என பழனிசாமி நேற்றே கூறிவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை போல் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தமிழகம் முழுவதும் இது போன்ற விழாக்களுக்கு உரிய அனுமதி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் உணர்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

HONDA -  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-202308:49:28 IST Report Abuse
HONDA நீங்களும் அன்றைக்கு செயலற்று இருந்ததால உங்களை செயலற்று செய்துவிட்டார்களே
Rate this:
Cancel
03-பிப்-202315:56:40 IST Report Abuse
அநாமதேயம் இதையேதான் அன்று உங்களை சொன்னார்கள் திமுக வினர்
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
03-பிப்-202313:45:33 IST Report Abuse
Manikandan Sivalingam திண்டுக்கல் மாவட்டம் கும்பகோணம் பாத்திரங்கடை குடும்ப சொத்துகளை அரசாங்கம் பரிமுதல் செய்ய வேண்டும் இவர்களின் சொத்துக்கள் அனைத்தும் சிவனுக்கு சொந்தமானது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X