மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை
Supreme Court,  Centre,  BBCSeries, Appeal,  உச்சநீதிமன்றம், பிபிசி ஆவணப்படம், மத்திய அரசு, தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் குறித்த பதிவுகள், காட்சிகள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரசாத் பூஷண், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹவா மொய்தாரா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil news



இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தடை விதித்த உத்தரவு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் . மேலும் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
04-பிப்-202311:57:13 IST Report Abuse
கனோஜ் ஆங்ரே சும்மா... வாஷ்...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
04-பிப்-202309:23:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ... அதாவது மோடியை குஜராத் வன்முறை வழக்கில் இருந்து "நிரபராதி" என்று சொல்லி விடுவித்து தீர்ப்பளித்த அதே நீதிமன்றம் இப்போ பதில் சொல்லுங்கன்னு அவரையே கேட்குது ...
Rate this:
Cancel
govindachari - walajapet,இந்தியா
04-பிப்-202303:05:26 IST Report Abuse
govindachari நீதித்துறை அரசியல் மன்றமாகி இடதுசாரி கோட்டை ஆகி பல வருடங்கள் ஆகின்றது இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X