ஆண்/ பெண் ஆகிய இருபாலரும் முதன்முறை காதலில் விழுந்தால் அவர்களது மனதில் தோன்றும் காதல் சின்னம் என்றால் அது சிவப்பு நிற இதயச் சின்னம்தான். காலாகாலமாக சினிமா, நாடகம், சிறுகதைகள், புதினங்கள், ஓவியங்கள் என எங்கு பார்த்தாலும் காதல் சின்னமாக இந்த சிவப்பு இதயம் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம். சரி..! காதலின் சின்னமாக வேறு ஏதும் பொருட்கள் இருக்கக் கூடாதா? ஏன் சிவப்பு நிற இதயத்துக்கு மட்டும் இந்த தனிச் சிறப்பு? இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் பதிலை தெரிந்துகொள்வோமா?
![]()
|
காதல் சின்னமாக இதயம் தேர்வு செய்யப்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன. ரோமானியர்கள் ஆட்சி காலத்தில் சில்ஃபியம் என்கிற செடி இத்தாலியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் இலைகள் இதயத்தின் வடிவில் இருந்ததாகவும் இதுவே பின்னாட்களில் காதல் சின்னமாக மாறியது எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபோன்ற செடி இருந்ததற்கான உயிரியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
![]()
|
காதல் ஜோடிகளுக்கு ரகசிய திருமணம் செய்துவைத்து புகழ்பெற்ற பாதிரியார் வேலன்டைன், சிவப்பு இதயத்தை காதலின் சின்னமாக அறிவித்தார் எனவும் கூறப்படுகிறது. இவரது நினைவு நாளான பிப்.,14 உலக காதலர் தினமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
![]()
|
காதல் உணர்வை இதயம் தூண்டுவதால், உலகின் சில இடங்களில் இதயத்தை காதல் சின்னம் போல மாற்றிக்கொண்டனர். ஆனால் காதல் உணர்வைத் தூண்டுவது இதயம் அல்ல. மூளையின் எமிக்டாடா (amygdala) என்னும் பகுதி. ஆனால் காதலரின் இதயத் துடிப்பை உணர்கிறேன், இரண்டு இதயங்கள் காதல் மூலம் இணைகின்றன என கதைகளில் கதாசிரியர்கள் பலர் எழுதி எழுதி காதலுக்கு இதயத்தை சின்னமாக மாற்றிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.