160 kg ganja chocolate seized | 160 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்| Dinamalar

160 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (3) | |
கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் 38 என்பவர் மொபட்டில் கடத்தி வந்த ஒரு மூட்டை போதை சாக்லேட் பிடிபட்டது. இதையடுத்து அவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது 160 கிலோ எடையுள்ள 27,040 சாக்லேட்டுகள் 10 லட்சத்து 82,000 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லெட்டுகள் கடத்த பயன்படுத்திய
160 kg ganja chocolate seized  160 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் 38 என்பவர் மொபட்டில் கடத்தி வந்த ஒரு மூட்டை போதை சாக்லேட் பிடிபட்டது.

இதையடுத்து அவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது 160 கிலோ எடையுள்ள 27,040 சாக்லேட்டுகள் 10 லட்சத்து 82,000 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லெட்டுகள் கடத்த பயன்படுத்திய மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா சாக்லேட் குற்றவாளியை பிடித்த மதுவிலக்கு எஸ்ஐ ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவுக்கு கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் வெகுமதி அளித்து பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X