சரிவில் இருந்து 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த அதானி எண்டர்பிரைசஸ்!

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. அக்குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் இன்று இன்ட்ராடே அளவில் 10.40 மணிக்கு 30% சரிந்திருந்தது. ஒரு மாதத்தில் 60% சரிந்திருந்தது. ரூ.1017 என்ற விலையில் இருந்த பங்குகளை, பலரும் வாங்க ஆரம்பித்ததால், அந்த விலையிலிருந்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 50% அளவுக்கு
AdaniEnterprises, BounceBack, அதானி

அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. அக்குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் இன்று இன்ட்ராடே அளவில் 10.40 மணிக்கு 30% சரிந்திருந்தது. ஒரு மாதத்தில் 60% சரிந்திருந்தது. ரூ.1017 என்ற விலையில் இருந்த பங்குகளை, பலரும் வாங்க ஆரம்பித்ததால், அந்த விலையிலிருந்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 50% அளவுக்கு உயர்ந்து ரூ.1,531 என்ற விலையில் நிறைவடைந்தது.


கெளதம் அதானியின் நிறுவனங்கள் பற்றி ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மோசமான அறிக்கையை சுமார் 10 நாட்களுக்குப் முன் வெளியிட்டது. இதனால் அதானி குழுமம், தனது வரலாற்றில் மோசமான நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகிறது. ஜனவரி 24, 2023 முதல் அதானி குழுமங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துள்ளன. வியாழன் அன்று கிட்டத்தட்ட 23 சதவீதம் சரிவுடன், அதானி குழுமத்தின் பங்குகள் 52 வார குறைந்த நிலையைத் தொட்டன. இன்றும் அதன் பங்குளின் சரிவு நிலை தொடர்ந்தது. இதனால் உலகப் பணக்காரர்களில் 2வது இடத்தில் இருந்த, கெளதம் அதானி இன்று 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


latest tamil news

குறுகிய காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் சரிந்ததால், அதானிப் பங்குகளை வாங்க தற்போது பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதானி எண்டர்பிரைசஸ் இன்று 30% சரிந்த போதும், அந்த இடத்திலிருந்து 50% அளவிற்கு உயர்ந்து பச்சையில் முடிவடைந்தது. அதானி துறைமுகங்கள் பங்குகளும் 14% இன்ட்ரா டே அளவில் சரிந்து, பின்னர் அந்த நிலையிலிருந்து 25% மீண்டன.



மூலதனத்தை திரட்டுவது பாதிக்கப்படலாம்


latest tamil news

நிறுவனங்களை மதிப்பிடும் மூடிஸ் (Moody's), இன்று (பிப். 3) வெளியிட்ட அறிக்கையில் "அதானி குழும நிறுவனங்களின் சந்தைப் பங்கு மதிப்புகள் விரைவான சரிவைக் கண்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி நெகிழ்வுத்தன்மையை மதிப்பிடுவதில் எங்கள் கவனம் உள்ளது. நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகமான அம்சங்களால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மூலதனத்தை திரட்டும் திறன் குறையக்கூடும்." என்று கூறியது.

Advertisement




வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-202302:08:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முறைகேடுகள் நடக்கவில்லை என்று சொல்ல வாய் வரவில்லை. ஒன்றிய அரசு முறைகேடுகளுக்கு பாதுகாப்பாக இருந்ததை மறுக்கமுடியவில்லை. அதானி போன்ற பிராடுகளால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச்சந்தையின் நம்பகத்தன்மை போய்விட்டது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை கணக்கிட்டு சொல்லுங்களேன்.
Rate this:
Cancel
visu - tamilnadu,இந்தியா
05-பிப்-202306:56:34 IST Report Abuse
visu அதானி நிறுவனம் இதில் 72% முதலீடு அதனியுடையது . அதனால் எவ்வளவு சரிந்தாலும் சுலபமாக பழைய நிலைக்கு மீண்டு விடும் .அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 2. ஆம் இடத்திலிருந்து 21. ஆம் இடத்திற்கு சரிந்ததில் பலருக்கு ஆனந்தம் என்ன ஒரு நல்ல எண்ணம் .இப்படி நினைப்பவர்கள் பெரும்பலும் பிஜேபி இ எதிர்ப்பவர்கலே
Rate this:
Cancel
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
04-பிப்-202311:54:51 IST Report Abuse
கனோஜ் ஆங்ரே நல்லா முட்டு கொடுக்குறீங்க... அதானிக்கு.. கொடுங்க, கொடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X