பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலியான தகவல்களை கொடுத்து, முறைகேடாக முதல்வர் பதவியைப் பெற்ற கல்லூரி முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர் விரோதப் போக்கை
 பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள்  போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலியான தகவல்களை கொடுத்து, முறைகேடாக முதல்வர் பதவியைப் பெற்ற கல்லூரி முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பூம்புகார் கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாடு கோப்புகளை உடனடியாக தாமதமின்றி தஞ்சாவூர் இணை இயக்குனருக்கு ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-202305:20:39 IST Report Abuse
J.V. Iyer கற்கும் கல்வியின் தரம் கெடக்கூடாது. நல்ல வாத்தியார்கள், விரிவுரையாளர்கள், பேராசியர், முதல்வர்கள், நிர்வாகம் இருந்தால்தான் நல்ல கல்வி குடுக்க முடியும். நல்ல கல்வி கொடுத்தால்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X