பசும்பால் அருந்துங்கள்: உமா பாரதி போராட்டம்

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
நிவாரி,மத்திய பிரதேசத்தில், மதுக்கடை முன் பசு மாட்டை கட்டி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி, 'மதுவை தவிர்த்து, பசும்பால் அருந்துங்கள்' என வலியுறுத்தினார்.மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த உமா பாரதி போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சாவில் உள்ள மதுக்கடை முன், பசுவை கட்டி வைத்து
Uma Bharati, Madhya Pradesh, Cow milk, உமா பாரதி, மத்திய பிரதேசம், பசும்பால், போராட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



நிவாரி,மத்திய பிரதேசத்தில், மதுக்கடை முன் பசு மாட்டை கட்டி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி, 'மதுவை தவிர்த்து, பசும்பால் அருந்துங்கள்' என வலியுறுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த உமா பாரதி போராட்டம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சாவில் உள்ள மதுக்கடை முன், பசுவை கட்டி வைத்து அதற்கு தீவனம் அளித்த உமாபாரதி, அங்கு திரண்ட பொதுமக்களிடம் பேசியதாவது:

பசும்பால் அருந்துங்கள்; மது குடிக்காதீர்கள். மாநில அரசு மக்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக வருவாய் ஈட்டக் கூடாது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தைரியமானவர்.

தற்போதுள்ள மதுபான கொள்கையில் சில தவறுகள் இருப்பதை ஏற்ற அவர், யோகா குரு பாபா ராம்தேவுடன் கலந்தாலோசித்து, தவறுகளை திருத்தி புதிய கொள்கையை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த முறை, இதே மதுக்கடை முன் போராட்டம் நடத்தியபோது, உமா பாரதி கடைக்குள் மாட்டுச் சாணத்தை வீசினார் என்பதால், இந்த முறை, விற்பனையாளர் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

உமா பாரதியின் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியை தவிர்த்த சிவ்ராஜ் சிங் சவுகான், ''மக்கள் குடிப்பழக்கத்தை கைவிடும் வகையில், விரைவில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-202313:01:54 IST Report Abuse
venugopal s மக்கள் நலன், மதுவிலக்கு இதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான், இவருக்கு சிவராஜ் சிங் சவுகானை கவிழ்த்து விட்டு இவர் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே!
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
04-பிப்-202306:42:39 IST Report Abuse
Amirthalingam Sinniah பசுவின் பால்... பசுப்பால். புல் பசுமையானது. தமிழை கொல்லாதீர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X