''அரசு நிதியில ஏகப்பட்ட குளறுபடி செஞ்சிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, தமிழக அரசு வருஷா வருஷம் ஒதுக்குற நிதி, கல்லுாரி அமைந்திருக்கிற இரும்பாலை பகுதி ஸ்டேட் வங்கி கிளையில, 'டிபாசிட்' ஆகுது... அந்த கிளை மூலமா, எல்லா பரிவர்த்தனைகளும் நடக்குது...
''அந்த நிதியில, மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஏகப்பட்ட குளறுபடிகளை செஞ்சிருக்குது... இது சம்பந்தமா, மருத்துவ கல்லுாரியின் அப்போதைய கண்காணிப்பாளர், 17 பக்க அறிக்கையை போன நவம்பர் மாசமே தாக்கல் செஞ்சு, கிடப்புல கிடக்குதுங்க...

''அந்த அறிக்கையில, 2006ல இருந்து 2021 வரையிலான காலகட்டத்துல, வங்கியில அரசு வரவு வச்சதுக்கும், கல்லுாரி கணக்குக்கும் இடையில, 32 லட்சம் ரூபாய் வரை கணக்கு இடிக்கிறதாகவும், அதுக்கான காரணத்தையும் தெளிவா சொல்லியிருக்காருங்க...
''அந்த அறிக்கையை துாசு தட்டி, இப்ப இருக்கிற டீன் விசாரணை நடத்தணும்னு, நேர்மையான டாக்டர்கள் விரும்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.