'ஆவினில் மறைமுக விலை உயர்வு'

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: 'மறைமுக விலை உயர்வை, ஆவின் நிறுவனம் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடித்த தி.மு.க., அரசு, தற்போது புதுவித விலை உயர்வை செயல்படுத்தி உள்ளது.ஆவின் பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்து அளவை, 4.5 சதவீதத்தில் இருந்து, 3.5
ஆவின், விலை, அண்ணாமலை, நெய், வெண்ணெய்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: 'மறைமுக விலை உயர்வை, ஆவின் நிறுவனம் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:


கடந்த, 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடித்த தி.மு.க., அரசு, தற்போது புதுவித விலை உயர்வை செயல்படுத்தி உள்ளது.


ஆவின் பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்து அளவை, 4.5 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக குறைத்திருக்கிறது.


கடந்த ஆண்டு ஆவின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு, 12 ரூபாய்; ஆவின் வெண்ணெய் லிட்டருக்கு, 20 ரூபாய்; நெய் லிட்டருக்கு, 50 ரூபாய் உயர்த்திய அரசு, மீண்டும் புதிய முறையிலான விலை உயர்வை செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.


latest tamil news


இதன் வாயிலாக ஆவின் நிறுவனத்தை முடக்கி, தங்களுக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் பயன்பெறுமாறு வழி செய்யும் நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.


ஆரஞ்சு நிற பால் வகையின் விலையை ஏற்றியதால், பச்சை நிற பால் வகைக்கு மாறிய மக்களை வஞ்சிக்கும் வகையில், பச்சை நிற பால் விற்பனையை முதலில் குறைத்தார்கள்.


தற்போது, பச்சை நிற பால் வகையில், கொழுப்பு சத்தை குறைத்து, ஆரஞ்சு நிற பால் வகையை, மக்கள் மேல் கட்டாயப்படுத்தும் முயற்சி இது.


கடந்த ஆண்டு பால் விலை உயர்வுக்கு, ஜி.எஸ்.டி., தான் காரணம் என்று கூசாமல், பால் வளத்துறை அமைச்சர் நாசர் பொய் சொன்னார்.


ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 25 சதவீத விலை உயர்வை மக்கள் தலையில், அரசு சுமத்தி உள்ளது. மற்றொரு விலை உயர்வை தாங்கும் நிலையில், மக்கள் இல்லை என்பதை உணர வேண்டும்.


மறைமுக விலை உயர்வை கைவிட்டு, எளிய மக்களுக்கான ஆவின் நிறுவனத்தை, அவர்கள் பயன்படும்படி, நடத்த வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

04-பிப்-202311:15:11 IST Report Abuse
முருகன் மக்கள் மீது அக்கறை இருந்தால் எரி பொருள் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவும்
Rate this:
Cancel
GANESUN - Chennai,இந்தியா
04-பிப்-202310:45:52 IST Report Abuse
GANESUN கேள்வி கேட்டால் கல் எடுத்து அடிச்சிரப்போறாரு...
Rate this:
Cancel
Guru Rajan - coimbatore,இந்தியா
04-பிப்-202308:04:08 IST Report Abuse
Guru Rajan பால் விலை உயர்வு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X