அண்டை மாநிலத்தவர் மாடுகளுடன் வந்தது கலவரத்துக்கு காரணம்: எஸ்.பி.,

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
கிருஷ்ணகிரி: ''ஓசூர், கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் வந்ததே கலவரத்துக்கு காரணமாக அமைந்தது,'' என, மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார். குளறுபடிஇதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில், அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறு படியோ இல்லை. விழா
ஓசூர், கோபசந்திரம், எருது, எஸ்பி, சரோஜ்குமார் தாக்கூர்,



கிருஷ்ணகிரி: ''ஓசூர், கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் வந்ததே கலவரத்துக்கு காரணமாக அமைந்தது,'' என, மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.


குளறுபடி




இதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:


ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில், அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறு படியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்; உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்னையில் ஈடுபடவில்லை.

பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளை கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், விதிகளுக்கு மாறாக, அண்டை மாநில வாலிபர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர்.

எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி, அவர்கள் மறியல் செய்தும், தடுக்க சென்ற போலீசாரை தாக்கியும், பெண் போலீசாரிடம் அத்து மீறியும் நடந்தனர்.

கலவரத்தை தவிர்க்கவே, வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து, போலீசார் அமர வைத்தனர். மறியல், கலவரத்தில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில், அரசு உடைமைகள் சேதமாகின; போலீசாருக்கு காயம் ஏற்பட்டது; பொதுமக்களுக்கு காயமில்லை.


latest tamil news



கடும் நடவடிக்கை



அங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் கூடிய இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 200 போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எருது விடும் விழா நடத்துபவர்கள், விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முறையாக பெறும் சான்றிதழ் விபரங்களை போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

எருது விடும் விழாவில் வெளி மாநில மாடுகளை பங்கேற்க அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04-பிப்-202311:33:16 IST Report Abuse
Svs Yaadum oore இத்தனை வருடமாக அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் இங்கு வந்துள்ளார்கள், ஆனால் விடியல் ஆட்சியில் வரக்கூடாதா?? .....மாநிலங்கள் வேறாக இருந்தாலும் மொழி கலாச்சாரம் எல்லாம் ஒன்றுதான் ....மாநில எல்லை கிராமங்கள் ....கன்னட தெலுங்கு மொழி பள்ளிகள் கூடத்தான் தமிழ் நாட்டில் இங்கு உள்ளது ..அவர்கள் வரக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார் இந்த மத மாற்றி விடியல் அரசு .....இது தமிழன் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி ....
Rate this:
Cancel
Nallashami - Coimbatore,இந்தியா
04-பிப்-202310:23:15 IST Report Abuse
Nallashami இந்த விடியா திராவிட மாடல் மக்கள் விரோத அரசும், அரசு இயந்திரமும் யாரோ சில மதவெறியர்களின் விருப்த்திற்காகவும், மதமாற்ற வியாபாரிகளைத் திருப்திப் படுத்தவும் காலங்காலமாக, நடைமுறையில் உள்ள நம் பாரம்பரிய, கலாச்சார விழாக்களை நடத்த தடைவிதிப்பதும், விழாக்களை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதித்து சீர்குலைப்பதும் தொடர கதையாகி வருகிறது.. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. இந்த விடியாத அரசு விலைபோன மீடியாக்களை வைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி ஏமற்றிவிட்டோம் என்ற மமதையில் இருப்பது, விரைவில் இந்த ஆட்சியின் அழிவை உறுதிப்படுத்தும்...
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
04-பிப்-202310:09:46 IST Report Abuse
S Ramkumar எஸ் பி க்கு இதெல்லாம் தெரியாத என்ன. விடியல் அரசு எழுதி கொடுத்ததை படிக்கிறார். படிக்காமல் இருக்க கவர்னரா என்ன. மாநிலங்களுக்கு உள்ளே பிரிவினையை உண்டாக்க சதி நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X