விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கில் நேற்று உதவி விசாரணை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., ஆஜராகவில்லை
தொடர்ந்து, அரசு தரப்பு சாட்சிகள் சார்பில், உதவி விசாரணை அதிகாரியான சென்னை தலைமையிட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, தற்போது சென்னை மாநில குற்ற ஆவணக் காப்பக இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கோமதி, நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.