'௧௦௮ பேரை களமிறக்க திட்டம்?' நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!

Added : பிப் 04, 2023 | |
Advertisement
ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு மாநகர் மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர், 108 பேரை களமிறக்கலாம் என்பதால், அரசியல் கட்சியினர் பீதி அடைந்துள்ளனர்.ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 80 அடி திட்ட சாலையை திறக்க வேண்டும். 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்,

ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு மாநகர் மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர், 108 பேரை களமிறக்கலாம் என்பதால், அரசியல் கட்சியினர் பீதி அடைந்துள்ளனர்.


ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 80 அடி திட்ட சாலையை திறக்க வேண்டும். 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 108 பேரை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பிரதான அரசியல் கட்சிகளை, ஆட்டம் காண செய்தது. அதேசமயம் அறிவித்த சங்கத்தினர் சார்பில், நேற்று வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் கூட பெற்றுச்செல்லவில்லை.


இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது: இரு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பிரச்னை குறித்து பேசினர். நாளை (இன்று) வரவிருப்பதாக தெரிவித்தனர். யாரும் வராவிட்டால், இறுதி நாளான, 7ம் தேதி மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X