அமெரிக்காவில் மீண்டும் உளவு பார்த்த சீனா: அடுத்தடுத்து பரபரப்பு

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன்: இரண்டாவது சீன உளவு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது. தகவல்களை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: இரண்டாவது சீன உளவு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




latest tamil news


அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது. தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பலுனை நாங்கள் சுடவில்லை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார்.


இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் , அரசு முறைப்பயணமாக சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



latest tamil news


இந்த நிலையில், இரண்டாவது சீன உளவு பலூன் இன்று (பிப்.,04) லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக செயற்கைக்கோள்கள் மூலம் இவ்வாறு உளவுப்பணிகள் நடக்கும். ஆனால் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பலூன்கள் கொண்டு உளவு பார்க்கப்படுகிறது என பென்டகன் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Pandi Muni - Johur,மலேஷியா
04-பிப்-202318:11:05 IST Report Abuse
Pandi Muni இங்கேயும் அந்நிய மத அடிமைகள் கருப்பு பலூன் விட்டு பாத்தானுங்க அவனுங்க பருப்பு வேகல.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
04-பிப்-202314:02:17 IST Report Abuse
mohan வர வர மிக பெரிய நாடகம், உலகம் முழுவதும் போய் கொண்டு உள்ளது...இவர்கல் என் அதை கட்டி இழுத்து வர கூடாது...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-202313:11:47 IST Report Abuse
Kasimani Baskaran உளவு பார்ப்பது அல்ல.... விமானங்கள் பறப்பதற்கு ஆபத்து விளைவிக்கும் கேவலமான செயல்... உளவு பார்க்க செயற்கைக்கோள்களை வைத்திருக்கிறார்கள்
Rate this:
mohan - chennai,இந்தியா
04-பிப்-202314:51:47 IST Report Abuse
mohanவிமானங்கள் பறக்கும் உயரத்திற்கு மேலே உள்ளது..உலக நாடுகளின் நாடகம்...இதை கட்டி இழுத்து வர எவ்வளவு நேரமாகும், அமெரிக்க விமான படைக்கு...???...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-202318:54:33 IST Report Abuse
Kasimani Baskaranஏவுகணை அல்லது ராக்கெட் மூலம் உடைத்து விடலாம். வைரஸ் அல்லது அணுக்கசிவுகளை உள்ளே வைத்து அணுப்பியிருந்தால் என்ன செய்வது? அனேகமாக முன்னர் கூட சீனா வைரஸ் அனுப்ப இது போல ஏதாவது ஒரு தொழில் நுணுக்கத்தைத்தான் உபயோகித்திருக்கும் என்று சந்தேகிக்கிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X