வங்கிகள் நிலை சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: நாட்டில் வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை
reservebank, RBI, adani, bank, bankingsector,  ரிசர்வ் வங்கி, வங்கித்துறை, அதானி, ஆர்பிஐ,

புதுடில்லி: நாட்டில் வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.


latest tamil news


அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன. இது, அந்த குழுமத்தின் மொத்த கடனில் 38 சதவீதம் ஆகும். அதிகமாக எஸ்பிஐ 21 ஆயிரம் கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளன தனியார் வங்கிகளும் கடன் வழங்கி உள்ளன.



latest tamil news

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: '' முதலீடு வளம், சொத்துகளின் தரம், லிக்விடிட்டி லாபம் எனப் பல்வேறு வரையறைகளிலும் இந்திய வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக உள்ளது.


இந்திய வங்கிகளின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய ஆய்வின்படி வங்கித்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (10)

Priyan Vadanad - Madurai,இந்தியா
04-பிப்-202322:51:06 IST Report Abuse
Priyan Vadanad அதானி போர்முலா இங்கேயும் ஒர்க்அவுட்டாகி வருகிறது. கீப் இட் அப். வராக்கடன் திட்டத்தில் அந்த ஆள் பங்கு இழப்பை ரிசர்வ் வங்கிகள் ஈடு கட்டி அந்த ஆளை உலகின் நம்பர் ஒன்னு ஆக்கி, உயரே தூக்கி பிடிக்கலாமே
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-பிப்-202322:04:45 IST Report Abuse
g.s,rajan நம்ப முடியவில்லை .
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
04-பிப்-202318:08:11 IST Report Abuse
Narasimhan ரிசர்வ் வங்கி என்றும் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். எவ்வளவு சீன கடன் செயலிகளால் மக்கள் சீரழிந்தார்கள். தமிழ் நாட்டில் ஒருவன் சில மாதங்களாக போலி வங்கியே நடத்தினான். இவர்கள் ஒன்றும் கிழிக்கப்போவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X