வாணியம்பாடியில் கூட்ட நெரிசல்: 4 பெண்கள் பலி

Added : பிப் 04, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
வேலுார்: வாணியம்பாடியில், இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 2 ஆயிரம் பேருக்கு நாளை(பிப்.,05) இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாணியம்பாடி சந்தை அருகே இன்று(பிப்.,04) அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் டோக்கன்
வாணியம்பாடி,  கூட்டநெரிசல், பெண்கள், பலி

வேலுார்: வாணியம்பாடியில், இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.


திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 2 ஆயிரம் பேருக்கு நாளை(பிப்.,05) இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாணியம்பாடி சந்தை அருகே இன்று(பிப்.,04) அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது.


அப்போது ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர் வந்து டோக்கன் பெற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் பிடித்துத் தள்ளியதில் பலர் கீழே விழுந்தனர். இதில் கூட்டத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-202305:48:36 IST Report Abuse
J.V. Iyer இதிலிருந்து இலவசத்திற்கு மக்கள் எப்படி மயங்குகிறார்கள் என்பது நிதர்சனம். இவர்கள் போன்ற மக்கள் இருக்கும்வரை திமுகதான் தமிழகத்தை ஆட்சி செய்யும்.. கால்பந்திற்கும் கடலின் நடுவில் சிலைவைக்கும் நாள் வரலாம். திராவிஷ மாடல் வாழ்க.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
04-பிப்-202320:44:54 IST Report Abuse
sridhar வாழ்க ட்றாராவிட கன்றாவி மாடல் . ஆயிரம் ருபாய் கொடுத்தால் வோட்டு . தன்மானம் சுய கௌரவம் எதுவும் கிடையாது . இலவசம் என்றால் இரண்டு கொடு .
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
04-பிப்-202319:42:11 IST Report Abuse
Kannan விடியல் ஆட்சியில் மடியல் தொடர்கிறது. வருத்தம் பல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X