Vaniyambadi stampede: 4 women killed | வாணியம்பாடியில் கூட்ட நெரிசல்: 4 பெண்கள் பலி| Dinamalar

வாணியம்பாடியில் கூட்ட நெரிசல்: 4 பெண்கள் பலி

Added : பிப் 04, 2023 | கருத்துகள் (12) | |
வேலுார்: வாணியம்பாடியில், இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 2 ஆயிரம் பேருக்கு நாளை(பிப்.,05) இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாணியம்பாடி சந்தை அருகே இன்று(பிப்.,04) அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் டோக்கன்
Vaniyambadi stampede: 4 women killed  வாணியம்பாடியில் கூட்ட நெரிசல்: 4 பெண்கள் பலி

வேலுார்: வாணியம்பாடியில், இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.


திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 2 ஆயிரம் பேருக்கு நாளை(பிப்.,05) இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாணியம்பாடி சந்தை அருகே இன்று(பிப்.,04) அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது.


அப்போது ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர் வந்து டோக்கன் பெற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் பிடித்துத் தள்ளியதில் பலர் கீழே விழுந்தனர். இதில் கூட்டத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X