புதிய சாலை சேதம்  லாரி சிறை பிடிப்பு

Added : பிப் 04, 2023 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டி கண்டிகை, பூபால் நகர் அருகே உள்ளது பாலாஜி நகர். அங்கு, 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீபத்தில், அந்த நகரில், புதிய தார்ச்சாலை போடப்பட்டது.அந்த குடியிருப்பு பகுதிக்குள், நேற்று காலை, மணல் லாரி ஒன்று, சென்றது. அதிக பாரம் காரணமாக, புதிய சாலை சேதமடைந்தது.அதைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியை சிறை பிடித்தனர். தகவல்
 புதிய சாலை சேதம்  லாரி சிறை பிடிப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டி கண்டிகை, பூபால் நகர் அருகே உள்ளது பாலாஜி நகர். அங்கு, 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீபத்தில், அந்த நகரில், புதிய தார்ச்சாலை போடப்பட்டது.

அந்த குடியிருப்பு பகுதிக்குள், நேற்று காலை, மணல் லாரி ஒன்று, சென்றது. அதிக பாரம் காரணமாக, புதிய சாலை சேதமடைந்தது.

அதைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார், மக்களிடம் சமாதானம் பேசினர்.

'அதிக பாரம் கொண்ட வாகனங்கள் நகருக்கு வரக் கூடாது' என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின், மக்கள் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X