வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: விழா ஏற்பாட்டாளர் கைது

Added : பிப் 04, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
வேலுார்:வாணியம்பாடியில், தைப்பூசத்தையொட்டி இலவச சேலை பெற டோக்கன் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்திற்கு காரணமான விழா ஏற்பாட்டாளர் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜின்னாபாலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், 50. இவர் ஜல்லி, செங்கல் சூளை, பூளு மெட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வருகிறார். இவர்
 வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி  4 பெண்கள் பலி: விழா ஏற்பாட்டாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார்:வாணியம்பாடியில், தைப்பூசத்தையொட்டி இலவச சேலை பெற டோக்கன் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்திற்கு காரணமான விழா ஏற்பாட்டாளர் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜின்னாபாலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், 50. இவர் ஜல்லி, செங்கல் சூளை, பூளு மெட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வருகிறார். இவர் தைப்பூசத்தையொட்டி 2 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை, தாலி, ஆண்களுக்கு வேஷ்டி வழங்குவதாக அறிவித்தார்.


இதற்கான டோக்கன் வாணியம்பாடி சந்தை அருகே வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் இப்போதே இலவச பொருட்கள் வழங்கப்படும் என தகவல் பரப்பினர். இதனால் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வந்து டோக்கன் பெற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.பலர் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசிலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.


இதில் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள், 60, அரபாண்ட குப்பம் ராஜாத்தி, 60, திருமஞ்சோலை கிராமத்தை சேர்ந்த மல்லிகா, 60, நாகம்மா, 60,, ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தனர்.வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 16 பேர் படுகாயமைடைந்தனர். 12 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


வாணியம்பாடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விழா ஏற்பாட்டாளர் ஐயப்பனை கைது செய்தனர்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

JAISANKAR - Mamallapuram,இந்தியா
05-பிப்-202306:51:49 IST Report Abuse
JAISANKAR என்னோட நண்பர் தன் 60 ஆவது பிறந்த நாளுக்கு புடவையும் ,வேட்டியும் உணவும். அளித்தார்.2 நாடுகளுக்கு முன்பே வீடு வீடாக சென்று 6 /7 கிராமங்களுக்கு சென்று ஏழைகளுக்கு மட்டும் token வழங்கப்பட்டது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-பிப்-202302:50:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்டோக்கன் வழங்கும் போதே பொருட்களையும் கொடுத்திருக்கலாமே, அதென்ன ஒரு அல்பத்தனம், கூட்டத்தில் தரோணும் என்று. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் ...தருவது தான் தானம். மத்தது எல்லாம் பீற்றிக்கொள்ளும் மதியீனம். ....
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-பிப்-202306:26:34 IST Report Abuse
D.Ambujavalli ஜல்லியிலும்,மணலிலும் கொள்ளையடித்த காசில் யாரோ புடவை வழங்க வரைமுறை எதுவுமின்றிக் கூட்டம் கூட்டி, மரணம், காயமடைய காரணமாவாராம் முதல்வர் மக்கள் பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலாவாராம் ஏற்பாடு செய்த அந்தத் தொழிலதிபர் கொடுக்கும்படி செய்ய வேண்டும்...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-202306:03:53 IST Report Abuse
Mani . V இலவசத்துக்காகவே வாழும் ஜென்மங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X