எட்டு மாத கர்ப்பமான தந்தை இந்தியாவில் இது முதல் முறை

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
திருவனந்தபுரம்: நம் நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதி கருத்தரித்து, பெற்றோராக உள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கேரளாவைச் சேர்ந்த சஹாத், தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.கேரளாவின் திருவனந்தபுரத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவர், சாஹத், 23. இவர், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர். இதே ஊரைச் சேர்ந்தவர் ஜியா, 21. இவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்,
கர்ப்பம், தந்தை, இந்தியா,

திருவனந்தபுரம்: நம் நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதி கருத்தரித்து, பெற்றோராக உள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கேரளாவைச் சேர்ந்த சஹாத், தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.


கேரளாவின் திருவனந்தபுரத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவர், சாஹத், 23. இவர், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர். இதே ஊரைச் சேர்ந்தவர் ஜியா, 21. இவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர், நாட்டியக் கலைஞர்.இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.


பாலினம் மாறுவதற்காக இருவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதற்காக சாஹத்தின் மார்பகம் அகற்றப்பட்டது. ஆனாலும், அவரது கர்ப்பப்பை அகற்றப்படவில்லை. இதற்கிடையே, இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல், உடல் ரீதியான பிரச்னை, சமூகத்தின் அங்கீகாரம் போன்றவற்றின் காரணமாக தயங்கினர்.


இறுதியில் இருவரும் பேசி, குழந்தை பெறுவது என முடிவு செய்தனர். இதையடுத்து, சாஹத் தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.நம் நாட்டில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர், கர்ப்பமாவது இது தான் முதல் முறை. சஹாத் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஜியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'ஒரு குழந்தைக்கு பெற்றோராக வேண்டும் என்ற எங்கள் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகப் போகிறது' என, சமூக வலைதளத்தில் ஜியா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-பிப்-202306:04:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கருத்தரித்து இருப்பது பிறப்பில் பெண்ணாக பிறந்து, தான் பெண்ணில்லை என்று மனதளவில் ஆணாக இருக்கும் கணவன். கட்டிப்பிடித்து இருப்பது பிறப்பில் ஆணாக பிறந்து, தான் ஆணில்லை என்று மனதளவில் பெண்ணாக வாழும் மனைவி.
Rate this:
Cancel
DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-பிப்-202308:32:24 IST Report Abuse
DUBAI- Kovai Kalyana Raman இந்த குழைந்தைக்கு யார் அப்பா ? அம்மா தான் காரணமா ? செயற்கை கரு வா ?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202300:29:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குதிரை மீன்கள் (horsefish) மட்டுமே ஆண் மீன்களால் :கருத்தரிக்கப்பட்டு" பிரசவம் ஆகின்றன. பெண் குதிரைமீன்கள் தங்களது கருமுட்டைகளை ஆண் குதிரைமீனுக்குள் செலுத்திவிடுகின்றன. பின்னர் ஆண் குதிரைமீன்கள் அவைகளை கருவாக்கி, கர்ப்பம் தரித்து மீனாக்கி பின்னர் வெளியே தள்ளுகின்றது. மீன்களில் கோமாளி மீன்கள் (clownfish) இனத்தில் ஆண் குஞ்சுகள் மட்டுமே படைக்கப்படுகின்றன. அவைகளில் ஒன்று பெண் மீனாக மாறிக்கொள்ளும் தன்மையை இயறக்கை அவைகளுக்கு கொடுத்துள்ளது. பெண்ணாக மாறி குட்டிகளை என்று இனத்தை பெருக்கிக் கொள்கின்றன. ஒருமுறை பெண்ணாக மாறிவிட்டால் மறுபடியும் பிறந்தபோது இருந்த ஆண் நிலைக்கு மாறமுடியாதாம். ஒருவழி மாற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X