பண பரிமாற்ற மோசடி வழக்கு ராகுல் நண்பரிடம் 'கிடுக்கி'

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மீதான பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரான அலங்கார் சவாயிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதுடில்லியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார். இக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஜராத்தைச் சேர்ந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மீதான பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரான அலங்கார் சவாயிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதுடில்லியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.



latest tamil news


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்.

இக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஜராத்தைச் சேர்ந்த சாகேத் கோகலே, ௩௫, பல்வேறு உறுதிமொழிகளை அளித்து, இணையதளம் வாயிலாக நிதி திரட்டி, மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கோகலேவை கடந்த மாதம் 25ல் கைது செய்தனர்.

கோகலேவின் வங்கிக் கணக்கில், ௨௩.௫௪ லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது குறித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கு அவர், சமூக வலைதளப் பணிக்காகவும், பிற ஆலோசனைகளுக்காகவும், காங்கிரசைச் சேர்ந்த அலங்கார் சவாய் தனக்கு பணம் தந்ததாக தெரிவித்துள்ளார்.


latest tamil news


முன்னாள் வங்கியாளரான அலங்கார் சவாய், ராகுலின் நெருங்கிய கூட்டாளி.

இவர், காங்கிரசின் ஆய்வுக் குழு தலைவராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோகலேவிடம் எந்த பணப் பரிமாற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பலருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்களிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
05-பிப்-202310:59:42 IST Report Abuse
வாய்மையே வெல்லும் அடுத்த பாரத் ஜுடோ யாத்திரை அமலாக்கத்துறை தலைமை அலுவலக அங்கப்ரதக்ஷிணமாக இருக்கும் என இத்தாலி செய்தியாளர்கள் கூறியுள்ளனர். பொறுத்து இருந்துதான் இரும்புக்கம்பி போட்ட கதவு யாருக்க்காக இருக்கும் என கழுகார் பட்சி செய்தி சொல்லுது
Rate this:
Cancel
05-பிப்-202309:59:15 IST Report Abuse
பேசும் தமிழன் நன்றாக விசாரியுங்கள் .....அந்த மோசடி கரம் ...இத்தாலி வரை நீள்வதற்கு வாய்ப்புள்ளது !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X