வாரிசுகளுக்கு பா.ஜ., மேலிடம் ஆதரவு

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என குற்றஞ்சாட்டி வரும் பா.ஜ.,விலும், வாரிசு அரசியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இக்கட்சியிலும், சில மாநில தலைவர்களின் வாரிசுகளை கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என குற்றஞ்சாட்டி வரும் பா.ஜ.,விலும், வாரிசு அரசியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இக்கட்சியிலும், சில மாநில தலைவர்களின் வாரிசுகளை கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.



latest tamil news


வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியும், ராஜஸ்தானில் காங்., ஆட்சியும் நடைபெறுகின்றன.

இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு பதவி கேட்டு வருகின்றனர். தராவிட்டால் பிரச்னையை கிளப்புவதோடு, தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகன் விஜயேந்திராவிற்கு எம்.எல்.ஏ., சீட்டும், மாநிலத்தில் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தால், துணை முதல்வர் பதவியும் தர வேண்டும் என மல்லுக்கட்டுகிறார்.

இதே போல ராஜஸ்தானிலும், பா.ஜ., முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தன் மகன் துஷ்யந்த் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.


latest tamil news


இவர்களுடைய வாரிசுகளுக்கு பதவி தராவிட்டால், சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என்பது மேலிட தலைவர்களுக்கு நன்றாக தெரியும். காரணம், எடியூரப்பாவுக்கும், வசுந்தராவுக்கும் அவரவர் மாநிலங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்களை பகைத்துக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் தயாராக இல்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமை வாரிசுகளுக்கு 'சீட்' தர மறுத்துவிட்டது. இதன் விளைவாக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிட்டது. எனவே, ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்தது போல, கர்நாடகா, ராஜஸ்தானில் நடந்து விடக்கூடாது என்பதால், வாரிசுகளைக் கவனிக்க பா.ஜ., தலைமை முடிவெடுத்துவிட்டதாம்.

Advertisement




வாசகர் கருத்து (8)

05-பிப்-202315:13:17 IST Report Abuse
ஆரூர் ரங் முழுநேர ஆர்எஸ்எஸ் பின்புலம் வலுவாக உள்ள யாரும் இது போல அடித்துக் கொள்வதில்லை. கூட்டம் சேர்க்க மற்றவர்களை யும் கட்சியில் சேர்க்கப் போய் வெளி கலாச்சாரம் தொற்றிக் கொள்கிறது.🤔 பரம்பரைத் தொழில் பாரம்பரியத்தை அழிப்பது எளிதல்ல. சாதி சங்கங்களது வாக்குவங்கி இன்னொரு காரணம்.
Rate this:
Cancel
05-பிப்-202315:08:38 IST Report Abuse
ஆரூர் ரங் முக்கிய காரணம்? நமது நாட்டில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்ன படித்திருந்தாலும் தனியாரில் யாரும் வேலைக்கு எடுப்பதில்லை😮‍💨. வெளிநாட்டு வேலைக்கே போக வேண்டியுள்ளது.2. அரசியல் பின்னணியிலேயே வளர்ந்த பலரும் அந்த அதிகார ருசிக்கு அடிமையாகி விடுவதும் அதிகம். ஆக இப்போ குலக்கல்வி தவறு. ஆனால்(அரசியல்) குலத்தொழில் தவறில்லை.
Rate this:
Cancel
Swamy - pondicherry,சவுதி அரேபியா
05-பிப்-202311:56:32 IST Report Abuse
Swamy அரசியலில் எல்லோரும் சாக்கடைகள் ...........................பிஜேபி மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X