அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: மருந்து நிறுவனத்தில் சோதனை

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை-சென்னை 'குளோபல் பார்மா' நிறுவனத்தில் மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை, திருப்போரூரில், 'குளோபல் பார்மா ஹெல்த்கேர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் தயாரித்த 'எஸ்ரிகேர், எல்.எல்.சி., மற்றும் டெல்சம் பார்மா' ஆகிய மருந்துகளால், அமெரிக்கர்களுக்கு பார்வை பாதிக்கப்படுவதாக, அந்நாட்டின் உணவு மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சென்னை 'குளோபல் பார்மா' நிறுவனத்தில் மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



latest tamil news


சென்னை, திருப்போரூரில், 'குளோபல் பார்மா ஹெல்த்கேர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தயாரித்த 'எஸ்ரிகேர், எல்.எல்.சி., மற்றும் டெல்சம் பார்மா' ஆகிய மருந்துகளால், அமெரிக்கர்களுக்கு பார்வை பாதிக்கப்படுவதாக, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம்சாட்டியது.

அந்நிறுவன மருந்துகளை இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மருந்துகள், இந்தியாவில் விற்கப்படவில்லை. அதேநேரம், அமெரிக்காவில் விற்பனைக்கு உள்ள மருந்துகளை திரும்ப பெறுவதாக, குளோபல் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தாமாக முன்வந்து, அந்நிறுவனம் மருந்து தயாரிக்கும் பணியை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்போரூரில் உள்ள அந்நிறுவன தொழிற்சாலையில், மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.

அதிகாலை 2:00 மணி வரை நடந்த ஆய்வில், மருந்து தொழிற்சாலையில் இருந்த மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள், இந்தியாவில் சந்தைப்படுத்தப் படவில்லை. எனவே, தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். அமெரிக்கா குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் ஆய்வு செய்து மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.


latest tamil news


அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும், மருந்துகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை.

எங்களது சோதனை முடிவுகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம். அமெரிக்காவின் சோதனை முடிவுகள் வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதுவரை, குளோபல் பார்மா நிறுவனத்தில், எந்த உற்பத்தி பணியையும் மேற்கொள்ளக் கூடாது என, உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

enkeyem - sathy,இந்தியா
05-பிப்-202315:14:06 IST Report Abuse
enkeyem இந்தியா தன்னிறைவுடன் முன்னேறி வருவது பெரியண்ணன் அமெரிக்காவுக்கும் நம்மை பல நூற்றாண்டுகள் அடிமைப்படுத்தி சுரண்டி கொழுத்து இப்போது திவாலாகும் நிலைமையில் உள்ள இங்கிலாந்துக்கும் கசக்கிறது. எனவே பல வழிகளில் இங்குள்ள சுயநல தேசத்து துரோகிகளின் உதவியுடன் இந்தியாவின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,மங்கோலியா
05-பிப்-202311:13:45 IST Report Abuse
பிடிகிட்டாபுள்ளி அமெரிக்கர்களுக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டிருந்தாலும், மோடியின் இமேஜுக்கு எந்த பாதிப்பும் இல்லை அப்படீன்னு ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டால் பாஜகவின் வாக்கு வங்கி சரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
05-பிப்-202309:48:44 IST Report Abuse
GMM இந்திய கோரோணா தடுப்பூசி உலகம் முழுவதும் ஏற்று கொள்ள பட்டு தற்போது நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் இயங்கும் மருந்து கம்பனி தர கட்டுப்பாடு யார் பொறுப்பு? நம் தர சான்று நிலை என்ன? இந்தியாவில் விற்கவில்லை. சர்வதேச அளவில் பெயர் கெட்டால், ஏற்றுமதி பாதிக்கும். இரட்டை அதிகாரம் கூடாது? மாநில சுகாதார அமைச்சர் பதில். தாமிர ஆலை மூடல். தற்போது மருந்து நிறுவனம் மூடல். இன்னும் சில பெரிய தொழில் சாலைகள் மூடினால் மாநில நிதி நிர்வாகம் நிலை மோசமாகும். திறமையான அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X