விசைத்தறிக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர்

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ஈரோடு,-''விசைத்தறிக்கு, 1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இதில், காங்., வேட்பாளர் இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.மானியம்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
power loom, free power, விசைத்தறி, இலவச மின்சாரம்,

ஈரோடு,-''விசைத்தறிக்கு, 1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இதில், காங்., வேட்பாளர் இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

மானியம்

கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: விசைத்தறி, கைத்தறிக்கு இலவச மின்சார பயன்பாடு அளவை அதிகரித்து முதல்வர் அறிவித்துள்ளார். இது தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. சில வாரங்களாக இதுபற்றி முதல்வரிடம் பேசி அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.

இதன்படி, விசைத்தறி ஒன்றுக்கு இதுவரை, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது, 1,000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. கைத்தறிக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் இனி, 300 யூனிட்டாக உயர்த்தப்படும்.

விசைத்தறி மற்றும் கைத்தறிக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சார யூனிட்டுக்கான தொகையை, அரசு சார்பில் நேரடியாக மின்வாரியத்துக்கு மானியமாக செலுத்தப்படும்.

தரம் உயர்வு

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடப்பதால், உடனடியாக அரசாணை வெளியிட இயலாது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

கடந்த காலங்களில் மின்வாரியம் மிகவும் நெருக்கடியான சூழலில் இருந்தது. தற்போதைய ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையால், தற்போது மூச்சு விடும் அளவுக்கு தரம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Oru Indiyan - Chennai,இந்தியா
05-பிப்-202308:52:09 IST Report Abuse
Oru Indiyan ஈரோட்டில் மந்திரி தேர்தல் வேட்பாளரை வைத்து கொண்டே இலவச அறிக்கை விடுகிறார். இது இடை தேர்தல் நடத்தை விதிமுறைகளக்கு முரண் தானே. தேர்தல் ஆணையம் தன் கண் காது மூளையை எங்கு வைத்துள்ளது?
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
05-பிப்-202307:12:51 IST Report Abuse
Rpalnivelu திருட்டு கழகங்கள் தமிழகத்தை போண்டியாக்காமல் விட மாட்டார்கள் போல
Rate this:
Cancel
ayen - ,
05-பிப்-202305:51:07 IST Report Abuse
ayen எதற்காக மின் கட்டணத்தை உயர்த்துவது போல் உயர்த்தி பிறகு தேர்தல் நெருங்கும் பொது இலவசம் என்று அறிவிப்பது இது கண் துடைக்கும் வேலை. இது விலை உயர்வால் பாதித்திருப்பது சாமானிய மக்கள் முதலீட்டாளர்கள் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X